வேலூர் மாவட்டம், வாலாஜபேட்டையில் உள்ள ஒரு இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க தனி நபர் ஒருவரிடம் ஒப்பந்தம் செய்த நிறுவனம், அங்கு செல்போன் டவர் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன.இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் 50- க்கும் மேற்பட்டோர் செல்போன் டவர் அமைய உள்ள இடத்திற்கு சென்று தனியார் தொடர்பு நிறுவனம் மேற்கொண்டு வந்த பணியை தடுத்து நிறுத்தினர்.

CELLPHONE TOWER VELLORE PEOPLES AGAINST STRIKE

Advertisment

இது குறித்து மக்கள் கூறுகையில், செல்போன் டவர் அமைத்தால் எங்கள் பகுதியில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். இதனால் பறவை, விலங்குகள் பாதிக்கப்படுவதோடு, நாங்களும், எங்களது குழந்தைகளும் பாதிக்கப்படும், அதனால் தான் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என்றனர்.