Skip to main content

புதுச்சேரி சிறையில் 11 செல்போன்கள் பறிமுதல்...!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் செல்போன் பயன்பாடு தலைதூக்கி இருப்பதாக சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறைக்காவலர்கள் யார்டு-2 அறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

 

cell-phones-seized-in-kalapet-jail

 

 

இந்த சோதனையின் போது  மறைத்து வைக்கப்பட்டிருந்த11 செல்போன்கள், சிம்கார்டு மற்று சார்ஜர் முதலியவற்றை கண்டறிந்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்த சிறை அதிகாரிகள் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்குப் பிறகு ஷாக் கொடுக்க இருக்கும் சிம்கார்டு நிறுவனங்கள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
SIM card companies to give a shock after the election

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் முடிந்த கையோடு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டண உயர்வு 15 சதவீதத்திலிருந்து 17 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

ரூபாய் 208 ஆக உள்ள பார்த்தி ஏர்டெலின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் 2027 இறுதியில் ரூபாய் 286 என உயரும் என கூறப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்படுவதன் மூலம் பார்த்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.