Skip to main content

செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு...

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

 

தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வட்டாட்சியர் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சின்ன செட்டி தெருவில் உள்ள கனகா அப்பார்ட்மெண்ட் மேல்தளத்தில் ஜியோ நிறுவனத்தின் 7 டன் எடைக்கு மேல் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகில் குடியிருப்பவர்கள் மற்றும் தெருக்களில் வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அந்த இடம் உறுதி தன்மைக்கு தகுதியான இடம் அல்ல என்றும் இந்தக் கட்டிடம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றும் நகராட்சியில் இது குறித்து சரியான அனுமதி பெற வில்லை என்றும் பொது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

 

இதனை அறிந்த சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன் சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வலியுறுத்தினார். இதன்பேரில் ஆய்வு செய்த வட்டாட்சியர் எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் கட்டடத்தின் உரிமையாளர் ஆகியவர்களை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தவாரம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறினார்.
 

இதனை ஏற்காத பொதுமக்கள் இது முக்கிய பிரச்சினை இன்றையோ நாளையோ அவர்களை அழையுங்கள். அதுவரைக்கும் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி வையுங்கள் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் வட்டாட்சியர் பணியை நிறுத்தாமல் சார் ஆட்சியரிடம் கூறுகிறேன் என மழுப்பலாக கூறி சென்றதால் அப்பகுதி பொதுமக்கள் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர். அப்போது பிரச்சினை வரும் சூழ்நிலையில் கோபுரம் அமைக்கும் பணியில் இருந்த பணியாளர்கள் பணியை நிறுத்தி வெளியேறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய வந்த சிதம்பரம் நகராட்சி ஆய்வாளர் ஆரோக்கியப் பிரின்ஸ், அலுவலர் ராஜி ஆகியோர் இந்த கட்டிடம் இரண்டு தளத்திற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டு அதற்கான வரி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மூன்று தளம் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கோபுரம் அமைக்கும் இடம் மூன்றாவது தளத்தில் தண்ணீர் தொட்டிக்கு மேல் அமைக்கப்படுகிறது. எனவே அனுமதி இல்லாத கட்டிடத்திற்கு மேல் கோபுரம் அமைப்பது சட்டத்திற்கு புறம்பானது என கூறினர். இதனைத்தொடர்ந்து சிதம்பரம் வட்டாட்சியர் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது சரியான முடிவுக்கு பொதுமக்களும் காத்திருக்கிறார்கள். மேலும் வட்டாட்சியர் ஒரு சார்பாக நடந்துகொண்டால் அவரை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறினார்கள்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.