Skip to main content

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி... அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட காதலன்... அதிரடியாக கைது செய்த காவல்துறை...!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (24). இவர் கடலூர் வண்டி பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, கடலூர் டவுனில் உள்ள ஒரு செல்போன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் இவருக்கும் அந்த கடையில் வேலை பார்த்த ஒரு இளம் பெண்ணுக்கும் காதல் உருவானது.

 

Cell phone store employee arrested in Villupuram

 



இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் காதலன் மீதுள்ள நம்பிக்கையில் அந்த பெண், தன்னுடைய அந்தரங்க புகைப்படத்தையெல்லாம் செல்போனில் அனுப்பியுள்ளார். இதற்கிடையில் காதலுக்கு பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இளம்பெண் கலையரசன்  மீது ஏற்பட்ட காதலை கைவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலையரசன் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் சம்பந்தமாக தீவிர விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

செல்போன், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களும் மிக நல்ல செயல்களுக்கு ஒரு புறம் பயன்பட்டாலும் கூட இதுபோன்று குற்றச் செயல்களுக்கு சமூக சீர்கேடுகளுக்கு அதிகளவில் பயன்படுகிறது. இவைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதும் இந்த முறைகேடான செயல்கள்தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.