Skip to main content

செல்போன் விபரீதம்... 14 வயது சிறுவனின் பாலியல் கொலை!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020
 Cell phone disaster... Incident in thiruchy



இன்றைய இளம் தலைமுறையினர் செல்போன், சினிமா ஆகியவற்றால் ஏற்படும் கலாச்சார சீரழிவில் வயது வித்தியாசம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் இது பாலியல் சீண்டல் முதல் கொலை வரை சென்று, பெரிய ஆபத்தான சமூகமாக மாறி இருக்கிறது என்பது திருச்சி சம்பவம் உணர்த்துகிறது.


ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கும், பல பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. பலரும் செல்போன் வாயிலாக கற்றுக்கொள்கிறார்கள். மற்ற நேரங்களில் சிறுவர், சிறுமியர் கைகளில் இண்டர்நெட் இணைப்புடன் கூடிய செல்போன் வழங்கும்போது பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் நமக்கு காட்டுகிறது.

கேம் விளையாடுகிறேன் என்று தொடங்கும் சிறுவர்கள் செல்போன் பழக்கம், நாளடைவில் திசை மாறி செல்கிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் மேல்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகள் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  வயது 9. இவர் வீ.பூசாரிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் 3 ம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்ல இருந்தார்.

 

 

 Cell phone disaster... Incident in thiruchy


இந்நிலையில் மாலை அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு மல்லிகை பூந்தோட்டத்தில் தலையில் பலத்த காயத்தோடு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை அருகில் உள்ள வீட்டை சேர்ந்த 14 வயது சிறுவன் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியதை அடுத்து சிறுமியை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் முதலில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அதன்பின்பு கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், உயரதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி ரத்தக்கறை படிந்த நிலையில் கிடந்த ஒரு உடையை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, சிறுமி அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனின் சட்டை என்பது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சிறுவன் மீது சந்தேகம் ஏற்படவே தொடர்ந்து நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் சிறுமியை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

 

 

 Cell phone disaster... Incident in thiruchy


கொலை செய்த சிறுவன், கிருத்திகாவிடம் அருகில் உள்ள தோப்பிற்கு விளையாடுவதாக சொல்லி அழைத்து சென்று செல்போனில் உள்ளது போன்று ஆபாச படங்களை காட்டி, அதில் வருவது போன்று முத்தம் கொடுத்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்க அந்த சிறுமி மறுத்து விட்டு நான் அம்மாகிட்ட சொல்லிவிடுவேன் என்று அழுதிருக்கிறார்கள்.  .

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் சிறுமியை கீழே கிடந்த கல்லால் அடித்துள்ளார். படுகாயம் அடைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். சட்டை கழற்றி போட்டுவிட்டு  வீட்டுக்கு சென்று குளித்து விட்டு எதுவும் தெரியாதது போல் தோட்டத்தில் சிறுமி இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக  சொல்லி நாடகம் ஆடினேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


 

nakkheeran app




சம்பவம் நடந்தது முதல் ஏதோ தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் ஒரு பெரிய நாடகத்தை 14 வயதிலேயே அரங்கேற்றி போலீசாருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்த பின்னரே வழக்கில் உண்மையை சிறுவன் ஒப்புக்கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலை தடுத்ததால் 14 வயது சிறுவன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.