Skip to main content

சண்டக்கோழி 2 படத்தை வெளியிடுவதில்லை என முடிவு!; திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி!!

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
ilangovan


திருடு விசிடி தயாரிக்க உடந்தையாக இருந்ததாக பத்து திரையரங்குகளுக்கு படங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து சங்கத்தின் மாநில பொருளாளர் இளங்கோவன் சேலத்தில் (அக்டோபர் 17, 2018) மேலும் கூறியது:


திருட்டு விசிடி தயாரித்ததாக குற்றம்சாட்டி, தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள பத்து திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வடசென்னை திரைப்படத்திற்காக சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் தொகை செலுத்தி இருந்த நிலையில், அவர்களுக்கு படத்தை வழங்க மறுத்துள்ளனர்.


எனவே நாளை (அக். 18, 2018) முதல் சண்டக்கோழி&2 உள்ளிட்ட அனைத்து புதிய திரைப்படங்களையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிடுவோம். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.


இதற்கிடையே, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பத்து திரையரங்குகள் விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி, வழக்கம்போல் நாளை புதிய படங்களை வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் பின்னர் இளங்கோவன் கூறினார்.


மேலும், தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் வரும் 23ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில், திரைத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, யாரும் பாதிக்காத வகையில் சுமூக முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாகவும் இளங்கோவன் கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன” - வைரமுத்து உருக்கம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vairamuthu about udhayam theatre yet to be closed

சென்னையில் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற திரையரங்கமாக இருந்து வருகிறது உதயம் திரையரங்கம். அசோக் நகரில் உள்ள இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு ஸ்கிரீன்கள் அமைந்திருக்கிறது. நீண்ட காலமாகியும் தியேட்டரின் உள்கட்டமைப்பு வசதிகளை அந்த நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்ததால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அங்கு குறைந்தே காணப்பட்டது. மேலும் கொரோனோவிற்கு பிறகு திரையரங்கிற்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்கை மூடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. 

ad

சமீபத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.  இந்த நிலையில், உதயம் திரையரங்கம் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது திரையரங்க ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் உதயம் திரையரங்கம் மூடப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது; இதயம் கிறீச்சிடுகிறது. முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரை வளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன. மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது. இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும். நன்றி உதயம்” என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

சென்னையில் மூடப்படும் பிரபல திரையரங்கம்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Popular udhayam cinemas theater to close in Chennai

சென்னையில் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற திரையரங்கமாக இருந்து வருகிறது உதயம் திரையரங்கம். அசோக் நகரில் உள்ள இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு ஸ்கிரீன்கள் அமைந்திருந்தன. நீண்ட காலமாகியும் தியேட்டரின் உள்கட்டமைப்பு வசதிகளை அந்த நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்ததால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அங்கு குறைந்தே காணப்பட்டது. 

இந்த நிலையில், உதயம் திரையரங்கம் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது திரையரங்க ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இதேபோல் சமீபத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. அதைத் தொடர்ந்து தற்போது உதயம் திரையரங்க கட்டடமும் இடிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.