style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
நாளுக்கு நாள் பெருகி வரும் இரு, நான்கு சக்கர வாகனங்களால் சென்னை நகரமே திணறிப் போகிறது. இதில் சாலை விதிகளை முறையாக பின்பற்றாத சிலரால், ஒட்டுமொத்த பொதுமக்களும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இத்தனை அசவுகரியங்களையும் சரிசெய்வதற்கு போதுமான காவலர்களும் இல்லை. அதனால், இதுபோன்ற பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும்பாடாக இருந்தது. இனி அது குறையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை.
ஆம், அதற்காக மூன்றாம் கண் என செல்லமாக அழைக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்களைப் பயன்படுத்தப் போகிறார்களாம் அவர்கள். இதுவரை சென்னையின் முக்கியமான சாலைகளில் இலக்கான 15 ஆயிரத்து 345 சி.சி.டி.வி. கேமராக்களில், பத்தாயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. இவற்றின் மூலம் சாலைகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, சாலை விதிகளை மீறுபவர்களைப் பிடித்து விடலாம் என்கின்றனர் போலீசார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810"> |