Advertisment

வாக்கு பெட்டிகள் வைக்கும் பகுதிகளில் சி.சி.டி.வி. பொருத்தும் பணி! (படங்கள்) 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வளாகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடமான ஸ்ட்ராங் ரூமுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

Advertisment

local body election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe