Skip to main content

கே.பாலகிருஷ்ணன் தலைமையில் CBSE மண்டல அலுவலகம் முற்றுகை

Published on 04/05/2018 | Edited on 04/05/2018
cpm

 

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதை கண்டித்து சென்னை அண்ணாநகரில் உள்ள CBSE மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன்,  ‘’நீட் தேர்விற்கு விலக்கு  அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். எண்ணற்ற போராட்டங்களை நடத்தினோம். ஆனால் மத்திய அரசு நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டது. 

 

cpm2

 

போராட்டம் நடத்தியும் மத்திய மாநில அரசுகள் கண்டுக்கொள்ள வில்லை. வெளி மாநிலத்தில் எழுத தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு  தொடரப்பட்டது. 

 

தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பக் கூடாது என உயர்நீதிமன்றம்  தடை விதித்தது. ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த தீர்ப்பிற்கு தடை வாங்கியது. தமிழகத்தில் இருந்து வரும் வழக்குகள் காவிரி வழக்கு உட்பட  என்றாலே ஒருவிதமாக நடத்துகிறது. 

 

cpm3

 

ஒரு லட்சம் மாணவர்கள் எழுதும் நீட் தேர்வுக்கு மையங்கள் அமைக்க இடமில்லை என்று கூறுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும். தமிழகத்தில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்படும் போது பல லட்சம் பேர் எழுதுகின்றனர். எனவே உடனடியாக தேர்வு மையங்களை தமிழகத்திலேயே மாற்ற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை பரிசீலனை செய்ய வேண்டும். 


தமிழகத்தில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு மொழி பிரச்சினை, 
மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத கூடாது. மருத்துவம் படிக்கக்கூடாது என மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.  தமிழகத்தில் மாற்று மையத்தை உருவாக்க எங்களது போராட்டம் தொடரும்’’என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.