நீட் விவகாரத்தில் ஊடக தகவல்கள் அடிப்படையில் தாமாக முன்வந்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துகிறது.
நீட் குளறுபடி தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீட் தேர்வுக்காக மகனுடன் சென்ற தந்தை கிருஷ்ணசாமி மரணம் அடைந்தார். நீட் தேர்வு எழுத வந்தவர்களை அலைக்கழித்தது ஏன்? என்றும், மாணவர்கள் பட்ட துன்பங்கள் குறித்தும், கிருஷ்ணசாமி மரணம் குறித்தும் விளக்கம் அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க என்ன செய்யப்போகிறீர்கள்? எதிர்கால திட்டம் என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.