பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வெழுதும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ. 50-இல் இருந்து ரூ.1,200 ஆக 24 மடங்கு உயர்த்தியுள்ளனர்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் 9-ஆம் வகுப்பு படிக்கும்போதே பதிவு செய்ய வேண்டும், அதேபோல பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக்கட்டண விவரங்களை சிபிஎஸ்இ அறிவித்தது. ஏற்கெனவே சிபிஎஸ்இ பள்ளிகள் பழைய கட்டணங்கள் மூலம் பதிவுகளை தொடங்கிவிட்ட நிலையில், இப்போது புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணத்துக்குரிய வித்தியாசத்தை மாணவர்களிடம் இருந்து இனிமேல் பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.
சிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக்கட்டணத்தின்படி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இனிமேல் 5 பாடங்களுக்கு ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும், இதற்கு முன் அவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தினர். ஏறக்குறைய 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினர் இதற்கு முன் ரூ.750 கட்டணம் செலுத்திய நிலையில் இனிமேல் ரூ.1500 கட்டணம் 5 பாடங்களுக்குச் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
பிளஸ் 2 வகுப்பு எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 5 பாடங்கள் தவிர கூடுதல் பாடத்துக்குக் கட்டணம் ஏதும் இதற்கு முன் செலுத்த தேவையில்லை. ஆனால் இனிமேல் ஒவ்வொரு கூடுதல் பாடத்துக்கும் ரூ.300 கட்டணமும், பொதுப்பிரிவினர் இதற்கு முன் கூடுதல் பாடத்துக்கு ரூ.150 செலுத்திய நிலையில் அவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும் .
தேர்வு தொகையை இறுதி தேதிக்குள் செலுத்தாவிட்டால் அவர்கள் பெயர் பதிவு செய்யப்படாது, 2019-20-ஆம் ஆண்டு தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.