Skip to main content

சிபிஐ சோதனையும் பட்டாசு உற்பத்தியாளர்கள் புலம்பலும்...

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

“பட்டாசுத் தொழிலுக்கு இது சோதனைக்காலம்..” என்றே சொல்லி வருகின்றனர், பட்டாசு உற்பத்தியாளர்கள். அவர்கள் கூறுவது போலவே, சிவகாசியிலுள்ள பட்டாசு ஆலைகளில் 15 பேர் கொண்ட சிபிஐ ஆய்வுக்குழுவினர், இன்று (12/03/2020) சோதனை நடத்தினர். 


உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடைகோரிய வழக்கில், தடையில்லை என்று தீர்ப்பு வந்தாலும், பட்டாசு உற்பத்தி செய்வதில் சில நிபந்தனைகளை விதித்திருந்தது உச்ச நீதிமன்றம். குறைவாக மாசுபடுத்தும் மேம்பட்ட நவீன வகை பட்டாசுகளை, அதாவது பசுமைப் பட்டாசுகளை மட்டுமே இனிமேல் உற்பத்தி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. 

cbi team inspection with sivakasi plants

அதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பேரியம் நைட்ரேட் கலந்த பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்று பட்டாசு ஆலைகள் செயல்பட்டாலும், சில உற்பத்தியாளர்கள் ‘நீங்க என்ன சொல்லுறது? நாங்க என்ன கேட்கிறது? பேரியம் நைட்ரேட் வேதிப்பொருள் இல்லாமல் தயாரிப்பதெல்லாம் பட்டாசு ஆகுமா?’ என்ற குமுறலில், வழக்கம் போலவே பட்டாசு உற்பத்தி செய்து வந்ததாக புகார் எழுந்தது. அதனால், சிவகாசி பட்டாசு ஆலைகளில் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனரா? என ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ- க்கு உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். 
 

அதன்படி, சிபிஐ குழுவினர் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டு, பட்டாசுகளையும், வேதிப்பொருள் கலவைகளையும் சீல் வைத்த அட்டைப் பெட்டிகளில் பேக் செய்து எடுத்துச் சென்றனர். “பா.ஜ.க. ஆட்சியில் எல்லா தொழில்களையும் போல பட்டாசுத் தொழிலும் நலிந்து வருவதற்குக் காரணம், அந்த மத்திய அமைச்சர்தான்..” என்று ஒரு பெண் அமைச்சரைக் கைகாட்டுகிறார்கள், பாதிக்கப்பட்ட சில பட்டாசு உற்பத்தியாளர்கள். “அந்த அமைச்சர் ‘அதிக அளவில் பட்டாசு உற்பத்தி செய்துவிட்டு குறைந்த அளவே கணக்கு காட்டிவருவது எனக்கு நன்றாகவே தெரியும். பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் இந்தியா முழுவதும் அடித்துவரும் கொள்ளை லாபம் எத்தனை ஆயிரம் கோடி என்ற கணக்கும் என் பார்வைக்கு வந்தது. 


அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து பல்லாயிரம் கோடிகளை கருப்பு பணமாக வைத்திருக்கின்றீர்கள். உங்களுக்கு ஏன் பா.ஜ.க. அரசு உதவ வேண்டும்? சீனாவிலிருந்து பட்டாசு இறக்குமதி செய்தால் அரசுக்கு வருவாய் அதிகம் கிடைக்குமே?‘ என்றெல்லாம் மிரட்டலாகப் பேசியிருக்கிறார். ஒருகட்டத்தில், மத்திய அமைச்சகத்தின் தூண்டுதலிலேயே, பட்டாசை தடை செய்யவேண்டுமென்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதுதான், பசுமைப் பட்டாசு வரைக்கும் கொண்டுவந்து எங்களை வதை செய்கிறது.” என்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

லாரியுடன் சிக்கிய 1,425 கிலோ தங்கம்; பறக்கும் படை அதிரடி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
1,425 kg of gold caught with the truck; The Flying Squad is in action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை குன்றத்தூர் அருகே 1,425 கிலோ தங்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த சிறிய ரக லாரி ஒன்றை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1,425 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, தங்க சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை தற்போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் .பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.