Skip to main content

தூத்துக்குடியில் குட்கா ஊழலில் சிக்கிய போலீஸ் ஆய்வாளர் வீட்டில் சிபிஐ ரெய்டு!

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
raid


குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த போது, சிப்காட் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் ஹரிஹரன் இவர் போராட்டத்திற்கு பின்பு பணி மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னையில் இருந்த இன்ஸ்பெக்டர் சம்பத் என்பவர் சிப்காட் காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இவர் குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர் என்பதால் இன்று காலை மதுரையில் உள்ள சிபிஐ அதிகாரிகள் எழு பேர் கொண்ட குழு இன்ஸ்பெக்டர் சம்பத்தின் வீடு இருக்கும் ஆறுமுகநேரி நகரில் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சிபிஐ அதிகாரிகளின் சோதனை காலை முதல் தற்போது வரை நீடித்து வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
enforcement department raided the house of former Viralimalai Vijayabaskar MLA

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

ர.ர.க்களோ, பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையை காட்டுகிறது என்கின்றனர்.

Next Story

பிரபல கொரியர் நிறுவனத்தில் இ.டி ரெய்டு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
ET Raid on Famous Courier Company

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பில் போட்டியிடும் ராமநாதபுரம் எம்.பி வேட்பாளர் நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்டி கொரியர் அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  நவாஸ் கனி தற்போது ராமநாதபுரம் எம்பியாக இருக்கும் நிலையில், அவருக்கு மீண்டும் போட்டியிட கூட்டணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தச் சோதனையானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாகவே சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலத்தில் பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அலுவலகத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வெளியேற்றிவிட்டு முக்கிய நிர்வாகிகளை மட்டும் உள்ளே வைத்து இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எஸ்டி கொரியர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களை வைத்துள்ளது. வரிஏய்ப்பு நடந்ததாக வருமானத்துறை சோதனை நடத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடப்பது பரபரப்பை கொடுத்திருக்கிறது.