சென்னையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள பல தனியார் நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 7 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஹேமலதா மாரியப்பன் என்பவரை தேடி சென்னை வளசரவாக்கத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அப்போது மோசடி வழக்கில் தொடர்புடைய ஹேமலதா 11 மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்துவிட்டு சென்றதாக வீட்டின் உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் தொடர்புடைய விவரங்களை சிபிஐ அதிகாரிகள் கேட்டறிந்து விட்டு சென்றுள்ளனர்.