Skip to main content

சாத்தான்குளம் வழக்கு... நாளை முதல் விசாரிக்கிறது சிபிஐ...

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
 CBI to probe Sathankulam case tomorrow

 

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் நாளை முதல் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் இந்த தகவலை சிபிஐ தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் ஒருபுறம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் சிபிஐ இந்த விசாரணை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அல்லது சிபிஐ 15 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தானே வந்து விசாரணை மேற்கொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அல்லது நெல்லை சரக நெல்லை சரக டிஐஜி விசாரணையை முன்னெடுக்க முடியுமா என்ற கருத்தை தெரிவித்த நீதிமன்றம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. அதன் பிறகு இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முதல் கட்டமாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து நேற்று முன்தினம் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்த நிலையில், நாளை முதல் சிபிஐ இந்த வழக்கில் விசாரணை தொடங்க இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 820 கோடி பரிவர்த்தனை; வெளியான அதிர்ச்சி தகவல்! 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
820 crore transaction; Shocking information released

யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் 41 ஆயிரம் பேரின் கணக்குகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுமார் ரூ. 820 கோடி பரிவர்த்தனை நடைபெற்றன. இதேபோன்று பிற வங்கிகளில் இருந்தும் 14 ஆயிரம் கணக்குகளிலும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இது குறித்து யூகோ வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதம் யூகோ வங்கியைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் தனிநபர் தொடர்பான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக இரண்டாவது நாளாக ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் 67 இடங்களில் இன்று (07.03.2024) சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.

மத்திய ஆயுத படையினர், காவலர்கள், சிபிஐ அதிகாரிகள் கொண்ட 40 குழுவினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில் யூகோ, ஐடிஎப்சி ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இரு ஹார்டு டிஸ்க், 40 செல்போன்கள், 43 டிஜிட்டல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கெஜ்ரிவாலைத் தொடர்ந்து அகிலேஷ்; சம்மன் அனுப்பிய சி.பி.ஐ

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
CBI summons Akhilesh Yadav for malpractice suit

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அம்மாநில முதல்வராக பதவி வகித்தார். அவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில், பொதுப்பணித்துறையினர் சட்டவிரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசியப் பதுமை தீர்ப்பாயம் தடைவிதித்திருந்த போதும் சட்டவிரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணை நடத்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், சி.பி.ஐ கடந்த 2016 ஆம் ஆண்டு முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்வர் அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் இன்று (29-02-24) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பி இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 7 முறை அவர் ஆஜராகாத நிலையில், 8வது முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.