Skip to main content

ஜிப்மர் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தினக்கூலி ஊழியர்களாக 1,400 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் ரூ. 2.45 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களை கண்காணிக்கும் அதிகாரிகள், தினக்கூலி ஊழியர்களில் சிலரை மட்டும் பணிக்கு வைத்து விட்டு, பலர் பணிக்கு வந்தது போல கணக்கு காட்டி பல கோடி ரூபாய்களை கடந்த சில ஆண்டுகளாக முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.

 

 CBI officials probing places including Jibmer

 

இதேபோல உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு, பணியாளர்களை கையூட்டு பெற்றுக்கொண்டு நியமித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக ஜிப்மர் ஊழியர்கள் சங்கத்தினர் சிபிஐக்கு புகார்கள் அனுப்பினர்.இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் திடீர் ஆய்வில் ஈடுபட்டு சில ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன், முறைகேடாக பணியாளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பாக சிலரிடம் விசாரித்து விட்டுச் சென்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென ஜிப்மர் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்துக்கு வந்த 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள், கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பிரிவு எழுத்தர்கள் இருவரிடமும், நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் சிலரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் இந்த ஆய்வில் ப்ல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

இதேபோல் புதுச்சேரி சாரத்திலுள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம், உழவர்கரை நகராட்சி அலுவலகம், புதுச்சேரி நகராட்சி மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 கொம்யூன் பஞ்சாயத்துகள் உட்பட பல்வேறு இடங்களிலும்  சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

புதுச்சேரியின் முக்கிய இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

கணவன் முகமூடியுடன் களத்தில் இறங்கிய மனைவி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The wife entered the field with her husband masked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தன் மனைவி, அதிமுக கட்சியினருடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடைய கணவர் தமிழ்வேந்தனின் முகமூடியை அணிந்தபடி அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''அதிமுகவில் ஒரு புதிய வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். ஒரு இளைஞருக்கு வேட்பாளராக வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அவருக்கு 34 வயது தான் ஆகிறது. அவர் என்னுடைய கணவர் என்பதை விடவும், இளைஞர் ஒருத்தர் தேர்தலில் நிற்கிறார் என்பதே முக்கியம்.
 

அவங்களோட வாக்குறுதிகள் இன்னும் எல்லாருக்கும் போய் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கிறேன். போதைப்பொருளை ஒழிப்பதும், கல்வியை அனைவருக்கும் சமமாக்குவது என்பதுதான் அவருடைய இலக்காக இருக்கிறது. அவருக்கு சப்போர்ட்டாக இங்கு நான் வந்து இருக்கேன். மக்களுக்கு நல்லாவே தெரியும் ஆட்சியில் இருக்கின்ற பாஜகவாக இருக்கட்டும் எதிர்க்கட்சியாக இருக்கட்டும் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. அவர்களுக்கு எதுக்கு இன்னொரு வாய்ப்பு. ஆட்சிக்கு வரும்போது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை. அதனால் தான் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியாக இருக்கட்டும் அன்பழகனாக இருக்கட்டும் அவர்கள் ஒரு நல்ல வாய்ப்பை எனது கணவருக்கு கொடுத்துள்ளார்கள்''என்றார்.