Advertisment

திடீர் திருப்பம்!!! - தமிழ் தெரிந்த சிபிஐ அதிகாரி சாத்தான்குளம் வருகை...

fg

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாக கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்து சென்றனர்.

Advertisment

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாக சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாக கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில வாரங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இதுதொடர்பான வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ குற்றச்சாட்டுக்குள்ளான காவலர்களை கைது செய்து விசாரித்து வருகின்றது. பாதிப்புக்குள்ளான பென்னிக்ஸ், ஜெயராஜ் குடும்பத்தினரிடம் ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில், தற்போது சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீண்ட நேரம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது தமிழ் தெரிந்த சிபிஐ அதிகாரி ஒருவர் சாத்தான்குளம் காவல்நிலையம் வந்துள்ளார். இதனால் விசாரணை வேகம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisment

sathankulam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe