Advertisment

சி.பி.ஐ- க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அடுக்கடுக்கான கேள்வி!

cbi madurai high court judges

ராமநாதபுரம் மாவட்ட நிதி மோசடி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி சஞ்சீவிகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ- க்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.

Advertisment

அப்போது நீதிபதிகள், கடந்த 20 ஆண்டுகளில் சி.பி.ஐ- க்கு எத்தனை வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன? சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ள வழக்குகளில் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விரிவான அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisment

CBI judges madurai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe