Skip to main content

சி.பி.ஐ.யின் புதிய இயக்குநர் யார் ?  - ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் பரபரப்பு ! 

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
c


இந்தியாவின்  உயரிய புலனாய்வு அமைப்பான  சி.பி.ஐ.யில் ஏற்பட்ட அதிகார மோதல்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை தகர்த்தெறிந்தது. சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதே சி.பி.ஐ.யில் ஊழல் வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ.இயக்குநர் அலோக்வர்மா உத்தரவிட்ட விவகாரம் தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இருவரையும் கட்டாய பதவிப்பறிப்பில் சி.பி.ஐ.யிலிருந்தே வெளியேற்றியது பிரதமர் அலுவலகம். சி.பி.ஐ.யின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். 

 

இந்த நிலையில் , தனக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அலோக்வர்மா. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 'அலோக்வர்மாவை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது ' என அறிவித்ததுடன், 'இயக்குநர் பதவி குறித்து பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் கமிட்டி கூடி விவாதித்து முடிவெடுக்க வேண்டும் ' எனவும் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, விவாதித்த பிரதமர் மோடி தலைமையிலான குழு, அலோக்வர்மாவை இயக்குநர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்து, தீயணைப்புத் துறைக்கு மாற்றியது. மேலும், புதிய இயக்குநரை தேர்ந்தெடுக்கும் வரை நாகேஸ்வரராவையே மீண்டும் தற்காலிக இயக்குநராக நியமித்தது பிரதமர் அலுவலகம். இந்த நிலையில், தீயணைப்புத்துறையின் இயக்குநர் பதவியை ஏற்க மறுத்ததுடன் , தன்னை ஓய்வு பெற்ற அதிகாரியாக அறிவித்து மத்திய அரசின் பணியாளர் துறையின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்தார் அலோக்வர்மா. ஆனால், இதனை ஏற்றுக்கொண்டு அலோக்வர்மாவை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. அதேசமயம், அலோக் வர்மாவுக்கு எதிராக மத்திய கேபினெட் செக்ரட்டரிக்கு ராகேஸ் அஸ்தானா அனுப்பிய ஊழல் குற்றச்சாட்டுகளை, மத்திய விஜிலென்ஸ் ஆணையத்துக்கு அணுப்பி வைத்து, இதன் மீது தீவிர கவனம் செலுத்துமாறு  அழுத்தம் கொடுத்தது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து, அலோக்வர்மாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த விஜிலென்ஸ் ஆனையம், ' ஊழல் நடந்திருக்க முகாந்திரம்  இருப்பதால் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் ' என உச்சநீதிமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. 

 


இதற்கிடையே,  சி.பி.ஐ.யின் புதிய இயக்குநர் நியமனம் குறித்து உயர்நிலை குழுவைக் கூட்டி விவாதித்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த விவாதத்தில்,  ஐந்துக்கும் மேற்பட்ட மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. புதிய இயக்குநர் நியமனம் குறித்த பரிசீலனைப் பட்டியலில்  உத்தரபிரதேச மாநில டி.ஜி.பி. ஓம்பிரகாஷ்சிங்கின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக   ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.