Skip to main content

சிறுமிகளை வைத்து ஆபாசப் படம்; சர்வதேச கும்பலுடன் தொடர்பு - தமிழக இளைஞரை சுற்றி வளைத்த சிபிஐ 

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

 CBI has arrested a youth from Thanjavur in a case related to girls issues

 

சர்வதேச கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சிறுமிகளை வைத்து ஆபாசப் படம் எடுத்த இளைஞரை சிபிஐ அதிகாரிகள் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. 35 வயது எம்.காம் பட்டதாரியான இவர் சுற்றுச்சூழல் குறித்து பி.ஹெச்.டி படித்து வந்துள்ளார். இந்நிலையில்,  கடந்த 15 ஆம் தேதி காலை 6 மணியளவில் விக்டர் ஜேம்ஸ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, டெல்லியிலிருந்து வந்த சிபிஐ டிஎஸ்பி சஞ்சய் கவுதம் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் திடீரென விக்டர் ஜேம்ஸின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். மேலும், விக்டர் ஜேம்ஸ் தனது சோசியல் மீடியா பக்கத்திலிருந்து, பிரதமர் மோடியைப் பற்றி அவதூறு பரப்பியதாகக் கூறி அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

இந்தியாவில் இருக்கும் சிறுமிகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுத்து அதை வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக இன்டர்போல் போலீசார் சிபிஐக்கு அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில், நாடு முழுவதும் 21 இடங்களில் இந்த விசாரணையும், கைதும் நடைபெற்று வந்துள்ளது. மேலும், சிபிஐ அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையில் விக்டர் ஜேம்ஸும் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகளால் விக்டர் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமிகளுடன் தனிமையில் இருப்பது போல் வீடியோ எடுத்து, அதனை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்ததும், விக்டர் ஜேம்ஸின் வீடியோவிற்கு அதிக பார்வையாளர்கள் இருப்பதும், சிபிஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

அதன்பிறகு, விக்டர் ஜேம்ஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூரில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.