Skip to main content

சி.பி.ஐ மற்றும் நீதிபதியால் தடை செய்யப்பட்ட நிலத்தைப் பதிவு செய்யக்கோரி ரகளை!- பத்திரப் பதிவு முடக்கம்

Published on 24/01/2021 | Edited on 24/01/2021

 

The CBI and the judge have demanded the registration of the forbidden land

 

தென்காசி மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமான சங்கரன்கோவில் நகரின் பத்திரப்பதிவான சப்ரிஜிஸ்டர் அலுவலகம் எந்நேரமும் பரபரப்பிலிருக்கும். அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முதன்மை இடத்திலிருப்பது, நிலம் மற்றும் பிற இனங்கள் தொடர்பான பத்திரம் பதிவு செய்கிற சார் பதிவாளர் அலுவலகங்கள்.

 

சங்கரன்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த 21.01.21 அன்று பிற்பகல் வழக்கறிஞருடன் வந்த மூன்று பேர்கள் தாங்கள் வாங்கிய நிலங்களை பதிவு செய்யும்படி முறைப்படி சார்பதிவாளரிடம் விண்ணப்பித்துள்ளனர். அதனை ஆய்வு செய்த சார் பதிவாளர் அவைகள் டெல்லி சி.பி.ஐ. மற்றும் நீதிபதி கமிட்டியினரால் தடை செய்யப்பட்டவைகள் என ஆணையைச் சுட்டிக்காட்டியவர் பதிவு செய்ய மறுத்திருக்கிறார். அதுசமயம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பத்திரப்பதிவின் பொருட்டு வந்த பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு ரகளையான நேரத்தில் போலீசார் வந்து சமாதானப்படுத்தி அமைதி ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

 

சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவின் பொருட்டு வரும் பொதுமக்களுக்கும், பத்திர எழுத்தாளர்கள், ஊழியர்கள் போன்றவர்களுக்குப் பாதுகாப்பில்லை. காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்திர எழுத்தர்கள் அனைவரும் நேற்றைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது நகரைப் பரபரப்பாக்கிவிட்டது. மட்டுமல்ல பதிவுத்துறையின் ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி வரை தகவல் போய் ஹாட்டாபிக் ஆனதுடன் விசாரணை வளையத்திற்கும் சென்றிருக்கிறது.

 

The CBI and the judge have demanded the registration of the forbidden land

 

இதுகுறித்துப் பதிவுத் துறையின் சார்பதிவாளரான ஈஸ்வரன் நம்மிடம், அன்றையதினம் கண்மாப்பட்டியின் முருகன் என்பவர் இரண்டு பேர்களுடன் வந்து சில சர்வே நம்பர்களைக் கொடுத்து ஆவணப்பதிவு செய்ய வேண்டும் என்றார்கள். அவர்கள் கொடுத்த அனைத்து சர்வே நம்பர்களும் பதிவுத் துறைத் தலைவர், நீதிபதி லோகா கமிட்டியின் JRMLC/PACL/AKD/4617/19825/1/2019 01.08.19ன் படியும், டெல்லி சி.பி.ஐ.யின் NO 2000 RC BD 1/2014/E/0004/CBI/BS/7FV நியுடெல்லி 14.05.18 நாளிட்டது மற்றும் பதிவுத் தலைவரின் கடிதங்கள் ஆகிய தடையாணையின்படி PACL நிறுவனத்திற்குச் சொந்தமான தடைசெய்யப்பட்ட சொத்துக்கள் என்றதனைச் சுட்டிக் காட்டிப் பதிவு செய்ய மறுப்புத் தெரிவித்தேன். 

 

The CBI and the judge have demanded the registration of the forbidden land

 

மாறாக அவர்கள் பத்திரப் பதிவுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பணி செய்யவிடாமல் தடுத்ததுடன் கடுமையான வாக்குவாதம் செய்தனர். ஒருமையில் பேசினர். தகாத வார்த்தைகள் விடுத்தனர். இதனால் அலுவலகப் பணியாளர்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் ஈடுபட்டனர். பிறகே போலீஸ் வந்தவுடன் நிலைமை கட்டுக்குள் வந்தது. இவைகளைனைத்தையும் குறிப்பிட்டு நகர காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளேன். பதிவுத்துறையின் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி.வரை புகாரைத் தெரிவித்துள்ளேன் என்றார்.

 

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகளை ஏற்பட்டதன் விளைவாய், பத்திர எழுத்தர்கள் அனைவரும் நடவடிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து பத்திர எழுத்தர்கள் சார்பிலோ, பதிவுத் தடையிருப்பின் அதனை முறையாகச் சட்டப்படி நீதிமன்றம், விசாரணை என்றிருக்கிறது. அங்கே முறையிட்டு எதிர் கொள்ள வேண்டுமே தவிர, பத்திரவுப் பதிவிற்கும் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லாதவாறு குந்தக நடவடிக்கையில் ஈடுபட்டால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தினர்.

 

இதுகுறித்து நாம், புகார் மற்றும் சம்பவத்திற்குரியவர்களில் ஒருவரான ரவியைத் தொடர்பு கொண்டு கேட்டதில். PACL எனப்படும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களில் 4 நம்பர்கள் 29.12.20 அன்று ஏற்கனவே அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுட்டிக்காட்டியும், தடை செய்யப்பட்டதில் எங்களின் ஒரு நம்பர் மட்டுமே வருவதால் அதனைவிடுத்து தடையில்லாத இதர எங்களின் நம்பர் நிலங்களைப் பதிவு செய்யச் சொன்னதில் மறுத்தார். எங்களை சார் பதிவாளர் அலையவிட்டார். நாங்கள் யதார்த்தத்தைத் தான் சொன்னோமே தவிர சட்டத்திற்குப் புறம்பான வகையில் நடந்து கொள்ளவில்லை என்றார். ஆனாலும் டெல்லி சி.பி.ஐ. மற்றும் நீதிபதி கமிட்டியின் தடையாணை தொடர்பான இச்சம்பவம் விவகாரமாகி சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவலர்கள் தாக்குதலால் டிரைவர் மரணம்? மக்களின் போராட்டத்தால் தென்காசியில் பதற்றம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi
வேன் டிரைவர் முருகன்

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர்.  ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.

Next Story

தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி; அதிகாலையில் நிகழ்ந்த விபத்து

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Overturned truck on tracks; An early morning accident

கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி தமிழக எல்லையான கோட்டைவாசல்  பகுதியில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கேரளாவில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மலை பாதையில் சென்று கொண்டிருந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் கேரளாவின் ஆற்றுக்கரை பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகள் இல்லாத சிறப்பு ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. விபத்தை அறிந்தவர்கள் இரவு நேரத்தில் டார்ச் லைட் காட்டி ரயிலை நிறுத்தியுள்ளார்கள்.

அந்தப் பகுதியில் அதிகாலையில் அதிகமான ரயில் போக்குவரத்துகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலானது செங்கோட்டையிலிருந்து 4 மணிக்கு புறப்படும். அந்த ரயில் இந்த விபத்து காரணமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது ரயில் போக்குவரத்து அந்த பகுதியில் சீரானது. இருப்பினும் மூன்று மணி நேரம் தாமதமாக எழும்பூர்-கொல்லம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.