ADVERTISEMENT
ADVERTISEMENT
பெரியகுளம் தாலுகாவில் மூன்று கிராமங்களில் பல ஏக்கர் நிலங்கள் அரசு நிலங்கள் மோசடி செய்யப்பட்ட தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பெரியகுளம் தாலுகாவில் பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்திற்குப் பட்டா மாறுதல் செய்ததாக புகார் எழுந்த நிலையில், நில மோசடி தொடர்பாக உதவி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. நில அளவையாளர் பிச்சைமணி, துணை வட்டாட்சியர்கள் சஞ்சீவ் காந்தி, மோகன்ராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா. வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரதா மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Show comments