Skip to main content

6 பேர் கொலை வழக்கு; விசாரணையில் கோட்டை விட்ட சிபிசிஐடி போலீசார்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

CBCID police did not properly investigate property sale case salem

 

சேலம் அருகே ஆறு பேர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, வழக்கில் முடக்கி வைக்கப்பட்ட  சொத்துகளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.     சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குப்புராஜ் (78). ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவருடைய மனைவி சந்திராம்மாள்  (72), மகன் ரத்தினம் (45), மருமகள் சந்தானகுமாரி (40), பேரன் கவுதமன் (20), பேத்தி விக்னேஸ்வரி (13) ஆகியோர் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட்  12ம் தேதி இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.     குப்புராஜின் மூத்த மகன் சிவகுரு (48), அவருடைய மகன் கோகுல் (17) ஆகிய இருவரும் தாங்கள்தான் 6 பேரையும் சொத்துக்காக கொலை  செய்தோம் என்றுகூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

 

அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்த மல்லூர் காவல்துறை, இந்த வழக்கு தொடர்பாக சிவகுரு, கோகுல் ஆகியோர் மட்டுமின்றி,  சிவகுருவின்  மனைவி மாலா (42), மகள் யுவபிரியா (32), ஆயுதப்படை காவலரும் மருமகனுமான ரஜினி (35), திமுக பிரமுகரும் அப்போதைய மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவருமான பாரப்பட்டி சுரேஷ்குமார் (37), அவருடைய உதவியாளர் அம்மம்பாளையம் செந்தில்குமார்,  வழக்கறிஞர் திருஞானசம்பந்தமூர்த்தி என்கிற சம்பத், திமுக பிரமுகரான வெடிகாரன்புதூர் சேகர் (40) ஆகிய 9 பேரை கைது செய்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசராணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மொத்தம் 1440 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க, இந்த கொலை வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி, பாரப்பட்டி சுரேஷ்குமாரை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இதற்கிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிவகுரு கடந்த 18.10.2016ம் தேதி  உயிரிழந்தார். அவருடைய மனைவி மாலாவும் உடல்நலமில்லாமல் இறந்து விட்டார். இந்தக் கொடூர கொலை, சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் நடந்தது என்பது விசாரணையில் ஊர்ஜிதமானது. குப்புராஜூவுக்கு சிவகுரு,  ராமலிங்கம், ரத்தினம் ஆகிய மூன்று மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் இருந்தனர்.     ரயில்வே காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ராமலிங்கம், விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். கருணை அடிப்படையில்  அவருடைய மனைவிக்கு ரயில்வேயில் வேலை வழங்கப்பட்டது. மூத்த மகன் சிவகுருவுக்கு 12 வீடுகளை குப்புராஜ் கிரயம் செய்து கொடுத்துள்ளார். அந்த வீடுகள் மூலம் கிடைத்து வந்த வாடகை வருமானம்  மூலம் சிவகுரு வாழ்ந்து வந்தார். மற்றொரு மகனான ரத்தினம், லாரி ஓட்டி வந்தார். ராமலிங்கம் இறந்துவிட்டதால் அவருடைய மகன் கார்த்திக்கிற்கு இரண்டரை ஏக்கர் நிலத்தை  தானப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.     

 

இதையடுத்து மீதம் இருந்த 4 ஏக்கர் நிலத்தை, ரத்தினத்திற்கு எழுதிக் கொடுத்தார். குப்புராஜூடன் ரத்தினம் குடும்பத்துடன் வசித்து வந்தார். இதற்கிடையே, சிவகுருவுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு சகோதரி விஜயலட்சுமி சிறுநீரகம் தானம் கொடுத்தார். மகனின் மருத்துவச் செலவுக்காக ஒரு சொத்தை விற்பனை செய்த குப்புராஜ் 20 லட்சம் ரூபாய் செலவு செய்தார். இந்நிலையில் ரத்தினத்திற்கு கிரயம் செய்து கொடுத்த நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இதையறிந்த சிவகுருவுக்கு அந்த நிலத்தின் மீது ஆசை ஏற்பட்டது. அந்த நிலத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு குப்புராஜூக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தார். மருத்துவச்செலவு, ஜீவனத்திற்கு 12 வீடுகளை எழுதிக் கொடுத்துவிட்டேன். இனிமேல் சொத்தில் சல்லிக்காசு கூட கிடையாது என்று குப்புராஜ்  கறாராக கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுரு, பெற்றோரையும், அவர்களுடன் வசித்து வந்த அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினரையும் தீர்த்துக்கட்ட  முடிவு செய்தார். 

 

அதையடுத்து சிவகுரு, தனது மகன் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து கொலைத் திட்டத்தை அரங்கேற்றியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையே சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் நடந்தது தான். அதனால் வழக்கு முடியும் வரை குப்புராஜ் மற்றும் சிவகுரு  தரப்பினர் யாரும் சர்ச்சைக்குரிய சொத்துகளை அனுபவிக்க முடியாது.  நிலைமை இவ்வாறு இருக்க, சர்ச்சைக்குரிய 4 ஏக்கர் நிலத்தை, வழக்கு முடிவடைவதற்கு முன்பே குப்புராஜின் வாரிசுகள் 5 பேர்  கையெழுத்திட்டு கடந்த பத்து நாள்களுக்கு முன்பு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டது தெரிய வந்துள்ளது. இந்த தகவலே  சிபிசிஐடி காவல்துறைக்கும் தற்போதுதான் தெரிய வந்துள்ளதால், அவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.     ஆறு பேர் கொலை வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. பிப். 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, பத்திரவுப்பதிவுத்துறைக்கு சிபிசிஐடி தரப்பில், சர்ச்சைக்குரிய சொத்தை வழக்கு முடியும் வரை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என கடிதம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படும் என சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.