Advertisment

கரூரில் சிபிசிஐடி விசாரணை நிறைவு

CBCID investigation completed in Karur

கரூரில் சிபிசிஐடி போலீசார் 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது சோதனை முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

Advertisment

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு 14 தனிப்படைகள் அமைத்து இந்தியா முழுவதும் தேடிவந்த நிலையில் இன்று காலை முதல் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

CBCID investigation completed in Karur

இன்று கரூர் மணல்மேடு அடுத்துள்ள கூலிநாயக்கனூர் என்ற இடத்தில்எம்.ஆர். விஜயபாஸ்கரின்ஆதரவாளரும், பெட்ரோல் பங்க் ஊழியருமான யுவராஜ் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் இந்தச்சோதனையானது நடைபெற்றது. அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பேரூர் அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ் மற்றும் புதூர் பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் சோதனையானது நடைபெற்றது. இந்நிலையில்திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடத்திய விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டனர்.

admk CBCID karur police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe