Skip to main content

கடைமடைக்கு வராத காவிரியை கடலுக்கு திருப்பி விடும் அரசு... கொந்தளித்த மக்கள் அதிகாரம்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

காவிரி ஆறு எப்போதும் தண்ணீர் இல்லாம் வறண்டு போய் இருக்கும் ஆனால் தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடந்த 25 நாட்களுக்கு மேலாக காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் காவிரி ஆற்றை நம்பி இருக்கும் கடைமடை கிளை கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடாமல் கொள்ளிடத்தில் தண்ணீரை திறந்து விட்டு யாருக்கும் பயன் இல்லாமல் கடலில் கலக்க வைக்கிறார்கள். இந்நிலையில் ஆற்றில் மணல் கொள்ளையும், தூர்வாருவதிலும் ஊழல் நடக்கிறது என்பதை கண்டித்து இன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

cauvery water not get in farmers makkal adhikaram strike


திருச்சி மண்டலம் பொது பணித்துறை நீர்வள ஆதாரத் துறையில் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் பேனர் பிடித்து ஊர்வலமாக முழக்கமிட்டு வந்து ஆர்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் . வெண்ணாற்றை சீரமைக்க 800 கோடி என்னாச்சு? கல்லணை கால்வாய் சீரமைக்க 2000 கோடி என்னாச்சு? என சரமாரி கேள்விகளை எழுப்பி அந்த அலுவலகத்தையே அதிர வைத்தனர்.

cauvery water not get in farmers makkal adhikaram strike

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமை தாங்கினார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் திருச்சி நகர தலைவர் தோழர் வின்சென்ட் மற்றும் தோழர்கள், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை மற்றும் அரியூர் பகுதி விவசாயிகள் திருநாவுக்கரசு மற்றும் ராஜேந்திரன் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். சுமார் அரை மணி நேரமாக ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கடைமடைக்கு தண்ணீர் செல்லாத வாய்க்கால், ஏரிகள், குளங்கள் விவசாயிகளை திரட்டி நடவடிக்கை எடுப்போம் என கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். அப்போது அவர்களை கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.