Skip to main content

தண்ணீரை திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை அதிமுக அரசு இதுவரை வலியுறுத்தவில்லை... விவசாயிகள் வேதனை!!!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து விவசாயிகளை காத்தது நாங்கள்தான் என மார்தட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்தது அதிமுக அரசு.
 

cauvery issue


ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு பிறகு 2018 டிசம்பரிலிருந்து மாதம் தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு இன்று வரை திறந்து விடவில்லை.  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி டிசம்பரில் 7.3 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரியில் 3 டி.எம்.சி. தண்ணீரும், பிப்ரவரியில் 2.3 டி.எம்.சி. தண்ணீர் என மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சொட்டுக்கூட திறக்கவில்லை. தங்களுக்கான தண்ணீரை திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு இதுவரை வலியுறுத்தவில்லை. என கவலை கொள்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.
 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு வரலாறு கண்டிராத வகையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்டது போன்ற நிலை. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே எட்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடியையும், 5 ஆண்டுகளாக சம்பா சாகுபடியையும் தொடர்ந்து இழந்து வரும் டெல்டா விவசாயிகளுக்கு அதிமுக அரசின் இத்தகைய நிலை எங்களுக்கு கவலை அளிக்கிறது." என்கிறார்கள் விவசாயிகள்.
 

மேலும் அவர்கள் கூறுகையில், "மேட்டூர் அணையில் இருந்து கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் குடிநீருக்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்திருப்பது இதுவே முதன்முறை. இவ்வளவு தண்ணீரை இதுவரை திறந்து விட்டதில்லை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடி மட்டுமே இருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பதே வழக்கமாக இருந்தது ஆனால் இப்போது வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தொடர்ந்து நீர் மட்டம் குறைந்து வந்தால் நடப்பாண்டும் குருவை போய்விடும். டெல்டாவில் குடிநீருக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்."என்றனர்.
 

இவ்வளவு தண்ணீர் திறக்க காரணம் என்ன பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம், "ஒரு காலத்தில் கொள்ளிடம், காவிரி ஆற்றில் சலங்கை போல் மணல் குவியலாக இருக்கும். தண்ணீரை தண்ணுள் வைத்து நீலத்தடி நீர்மட்டம் குறையாமல் நீர்ஆதாரத்தை காத்துவைத்திருக்கும், ஆனால் தற்போது அரசு ஒருபுறம் மணல் குவாரிகள் மூலம் மணலை கொள்ளை அடித்துவிட்டது. மறுபுறம் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு இரவு, பகல் தெரியாமல் மணலை கொள்ளை அடித்து செல்ல அனுமதித்துவிட்டனர். இதனால் ஆறுகள் முழுவதும் தண்ணீரை காத்துவைக்கும் மணல் இல்லாமல் தரைதட்டி கிடப்பதால், விடப்படும் தண்ணீர் முழுவதும் வெயிலில் ஆவியாக சென்றுவிடுகிறது." என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.