cauvery river tn govt officers appointed

டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றைத் தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசின் அறிவிப்பில், "தஞ்சை மாவட்டம் - பிரதீப் யாதவ், திருவாரூர் மாவட்டம் - கே.கோபால், நாகை மாவட்டம் - அபூர்வா, மயிலாடுதுறை மாவட்டம் - கிர்லோஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்திற்கு ஏற்கனவே உள்ள அதிகாரிகள் கண்காணிப்பார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனால் அரியலூர், கரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி ஆறு தூர்வாரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.