Skip to main content

காவிரியில் வெள்ளப்பெருக்கு: பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து நிறுத்தம்!

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 

கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கேஆர்எஸ், கபினி ஆகிய இரண்டு முக்கிய அணைகளும் நிரம்பி வழிகின்றன. அவ்விரு அணைகளுக்கும் வரும் தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. 

இதைத்தொடர்ந்து கடந்த செப். 7ம் தேதி, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்தாண்டில் முதன்முதலாக அணை முழுமையாக நிரம்பியுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரும் முழுமையாக பதினாறு கண் மதகுகள் வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. 

cauvery river flood salem district poolampatti lake boat service stop


செவ்வாய்க்கிழமை (செப். 10) மாலை நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 65000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பூலாம்பட்டி காவிரி கரையோர மக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. 

பூலாம்பட்டி காவிரி ஆறானது, சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. பூலாம்பட்டியின் அக்கரையில் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை அமைந்துள்ளது. இதனால் இரு மாவட்ட மக்களும் பயணிக்க ஏதுவாக பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், பூலாம்பட்டி காவிரியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூலாம்பட்டி காவிரியில் படகு போக்குவரத்து கடந்த நான்கு நாள்களாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், சேலம், ஈரோடு மாவட்டங்களின் எல்லையோர மக்கள் 3 கி.மீ. தூரம் வரை மாற்றுப்பாதை வழியாக நடந்தும், வாகனங்களிலும் பயணித்து வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.