Advertisment

காவிரி மேலாண்மை வாரியத்தை பாஜகவால் மட்டுமே அமைக்க முடியும்! - தமிழிசை

காவிரி மேலாண்மை வாரியத்தை பாஜகவால் மட்டுமே அமைக்க முடியும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி பிரச்சனை 120 ஆண்டு காலமாக நீடித்து வரும் பிரச்சனை. 120 ஆண்டு கால பிரச்சனையை எவ்வித குழப்பமும் ஏற்படாத வகையில் தீர்க்க வேண்டும்.

Advertisment

முந்தைய காங்கிரஸ் ஆட்சியால் தீர்க்க முடியாததால் காவிரி பிரச்சனை இந்த அளவிற்கு இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப்போவது பாஜக தான் என்பதில் உறுதியாக உள்ளோம். சில நாட்கள் காலதாமதம் ஏற்பட்டாலும் கடைமையை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜகவுக்கு சிறிதும் இல்லை. தமிழக மக்களுக்கு பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

tamilisai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe