Skip to main content

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்போம்: கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

Published on 17/03/2018 | Edited on 17/03/2018


 

Cauvery management board


மத்திய அரசு வருகின்ற 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நம்மை நாமே திருப்திபடச்செய்யுமே தவிர இதை பிரதமர் எந்தவகையிலும் கருத்தில் கொள்ளமாட்டார்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஒன்று சேர்ந்து டெல்லி சென்று பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும்.
 

மேலும் மத்திய அரசுவரும் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி விவசாய அமைப்புகள் நடத்தும் தொடர் இரயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு கூறினார். 
- சுந்தரபாண்டியன் 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மேகதாதுவில் அணை - ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு கடும் எதிர்ப்பு!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

cauvery management board meeting tamilnadu goverment  officer

 

மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் ஹல்தர் தலைமையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று (25/06/2021) காலை 11.00 மணிக்கு கூடியது. காணொளி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

 

தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். 

 

கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள், மேகதாது அணை விவகாரத்தை எழுப்பினர். மேலும், “உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மத்திய அரசிடம் எப்படி கர்நாடகா அனுமதி பெற முடியும்? அணைகட்ட அனுமதி பெறுவோம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியது குழப்பம் ஏற்படுத்தக் கூடியது. மேகதாது மட்டுமின்றி காவிரியில் எங்கு அணை கட்டினாலும் எங்களது அனுமதி தேவை” என்று ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

Next Story

ஜூன் 22- ஆம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

cauvery management board metting video conference

 

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 22- ஆம் தேதி அன்று காணொளி மூலம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

 

இந்த கூட்டத்தில்தான் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நீர் திறப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். குறிப்பாக, அந்த மாநிலங்களில் பெய்து இருக்கும் மழையின் அளவு அடிப்படையிலும், அணை பகுதிகளில் எவ்வளவு நீர் இருப்பு உள்ளது என்ற அடிப்படையிலும் நீர் திறப்பு முடிவு செய்யப்பட உள்ளது. 

 

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியிருந்த நிலையில் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.