ஓ.என்.ஜி.சி. அனுமதியை நீட்டிக்க பரிந்துரை?

cauvery delta ongc work may be extend

காவிரி டெல்டாவில் எண்ணெய் கிணறுகளை தோண்ட ஓ.என்.ஜி.சி.க்கான அனுமதியை மூன்று ஆண்டு நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓ.என்.ஜி.சி. கோரிக்கையை ஏற்று சுற்றுச்சூழல் அனுமதியை 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் மதிப்பீடு குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்பட 24 இடத்தில் எண்ணெய் கிணறு தோண்ட 2013- ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதில் 16 எண்ணெய் கிணறுகளை அமைத்துவிட்ட ஓ.என்.ஜி.சி. எஞ்சிய பணிகளை முடிக்க மேலும் அவகாசம் கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

cauvery delta ongc
இதையும் படியுங்கள்
Subscribe