Skip to main content

வாழ வுடு, இல்லன்னா கொன்னுடு...: திண்டுக்கல் சீனிவாசனுக்கு மனு அனுப்பிய கால்நடைகள்

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு 'பொறந்த ஊருக்கு புகழ சேரு' இயக்க நண்பர்களுடன் ஊர்வலமாக சென்ற ஆடுகள், குதிரை போன்ற கால்நடைகள் வனத்துறை அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். இந்த மனுவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பார்வைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். 

 

dindigul srinivasan


 

அந்த மனுவில் கூறியிருப்பது,

நாங்கள் மனிதர்களை சார்ந்து வாழும் உயிரினங்கள். ஆம் இந்த மண்ணில் வாழ்ந்து மடிந்து போன எங்களின் முன்னோர்களின் எலும்புக் கூடுகளை திருக்கோகர்ணம் அருங்காட்சியகத்தில் வைத்து இது தான் காட்டு மாடு, இது தான் டைனோசர் என்று விளக்கம் கொடுத்து வருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் உங்களால் நாங்களும் அப்படி ஒரு காட்சிப் பொருளாக அருங்காட்சியகத்தில் எலும்புக் கூடுகளாக தான் நிற்கப்போகிறோம் என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதனால் தான் எங்களுக்கு வாழ்வு கொடுங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம். 
 

 

 

அரசாங்கத்தின் வனத்தில் அதிகமாக தைல மரங்களை வளர்க்கிறீர்கள். அதனால் அந்த காட்டில் வளர்ந்த புல், பூண்டு மட்டுமின்றி பாம்பு, பூராண், பல்லி கூட அந்த வனங்களில் வாழமுடியவில்லை. முன்னொரு காலத்தில் புதுக்கோட்டை வனங்களில்  முயல், மான், நரி, என்று கூட்டம் கூட்டமாக வாழ்ந்தது. அப்பப்ப ஆசைக்கு ராஜா வந்து வேட்டையும் ஆடுவார். அப்படியான வனங்கள் இன்று பாலைவனங்களாகிவிட்டது. 
 

Cattle that petitioned to the Forest Department


 

நாங்கள் உண்ண உணவில்லை, குடிக்க தண்ணீர் இல்லை உணவுக்கும், தாகம் தீர்க்க தண்ணீர்க்கும் வெளியிடங்களுக்கு செல்லும் போது வாகனங்களில் அடிபட்டு சாகிறோம். எங்களை வளர்ப்பவர்களுக்கும் மழை தண்ணீர் இல்லாததால் விவசாயம் பொய்த்து அவர்களே பட்டினி கிடக்கிறார்கள். அப்பறம் எப்படி அவர்களும் எங்களை கவனிக்க முடியும்.

அதனால் பசிக்கும் நேரத்தில் சாலை ஓரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தின்ற எங்கள் உறவுகள் துடிதுடித்து  செத்துப் போறதை எங்கள் கண்களால் காண முடிகிறது. அப்போது மட்டும் கண்ணீர் சிந்திவிட்டு உணவுக்காக அலையும் நிலையை ஏற்படுத்திவிட்டீர்கள்.

தேசிய பறவை மயில்கள் இன்று எந்த காட்டிலும் இல்லை. காரணம் எல்லாமே தைல மரக்காடுகளாக உள்ளதால் வெப்பம் தாங்க முடியாமலும் உணவு கிடைக்காமலும் வீதி வீதியாக சுற்றி சாலையை கடக்கும் போது வாகனம் மோதி இறக்கிறது. சில நாளுக்கு முன்னால ஆலங்கடி அருகே உணவுக்காக சாலையை கடந்த போது ஒரு தேசிய பறவை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது. 

 

Cattle that petitioned to the Forest Department

 


 

இந்த நிலை மாற வேண்டும் என்றால் வனத்துறையான நீங்கள் உங்கள் தைல மரக்காடுகளை முதலில் அழித்துவிடுங்கள். பிறகு எங்கள் பறவைகள் எங்கிருந்தாவது கொட்டைகளை கொண்டு வந்து மரங்களை உருவாக்கி வனமாக்கிவிடும். பிறகு மழை பெய்யும் எங்கள் விவசாயிகள் வாழ்வார்கள் நாங்களும் அருங்காட்சியகம் போகமாட்டோம்.

இப்ப எங்கள் கோரிக்கை புரியும் என்று நினைக்கிறோம். உங்க ஆட்சியாளர்களுக்கும் எங்கள் கோரிக்கையை எடுத்து சொல்லுங்கள். போனவாரம் எங்களுக்காக திருநங்கைகள் தனியார் நிலத்தில் தைல மரங்களை அழித்து பலன் தரும் பழ மரங்களை நட்டார்கள். அவர்களைப் போல வனத்துறையும் செய்தால் நன்றாக இருக்கும்.
 

எங்களை வாழவிடுங்க.. இல்லைன்னா ஒட்டுமொத்தமா கொன்னு போடுங்க என்று உருக்கமான மனுவை கொடுத்தார்கள்.

 
தைல மரங்களால் மழை இன்றி வறட்சி மாவட்டமாக இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை வளமான பூமியாக்க திருநங்கைகளை தொடர்ந்து கால்நடைகளும் கிளம்பிவிட்டது. இவர்களுக்கு துணையாக பொறந்த ஊருக்கு புகழ சேரு. புதுக்கோட்டை நண்பர்களும் செயல்பட தொடங்கியுள்ளனர். இதன் பிறகாவது வனத்துறையும் தமிழக அரசும் கவணிக்குமா? இல்லை மண்ணு தரிசானால் நமக்கு என்ன என்று வழக்கம் போல மனுவை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தைல மரக்கன்றுகளை நடவு செய்யுமோ பொருத்திருந்து பார்ப்போம்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.