Skip to main content

“எங்க ஏரியாவுக்கு எதுக்கு வந்தீங்க?” - இளைஞர்களைத் தாக்கிய கிராமத்தினர்! 

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

viruthunagar district, village peoples youngster incident police

 

‘சாதிக் கண்’ கொண்டு பார்ப்பதையே வழக்கமாக வைத்திருந்தால், தமிழகத்தில் எந்த ஒரு கிராமமும் நிம்மதியாக இருந்துவிட முடியாது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேண்டுராயபுரமும், துலுக்கபட்டியும் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.   

 

என்ன விவகாரம் இது?

 

வேண்டுராயபுரம் கிராமத்தில், கடந்த சில நாட்களாக ஆடு, கோழிகள் திருடுபோவது வழக்கமாக இருந்திருக்கிறது. இதுகுறித்து மல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், இன்று (30.04.2021) அதிகாலை 04.00 மணியளவில், அந்த வழியாக துலுக்கபட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரனும், சதீஸ்வரனும் டூ வீலரில் வந்திருக்கின்றனர். இருவரையும் அந்தக் கிராமத்தினர் பிடித்து வைத்துக்கொண்டு, “யாருடா நீங்க? எந்த ஏரியா?” என்று விசாரித்துள்ளனர். அவர்கள்,  தங்கள் கிராமத்தின் பெயரைச் சொல்ல, “இந்த நேரத்துல எங்க ஏரியா வழியா எதுக்கு வந்தீங்க? அதான், வேற ரூட் இருக்குல்ல?” என்று விசாரித்தபடியே, மாறி மாறி தாக்கியதோடு, மல்லி காவல் நிலையத்துக்கும் இழுத்துச் சென்றனர். அங்கிருந்த போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர்.

 

viruthunagar district, village peoples youngster incident police

 

சாதி அடிப்படையில் தங்களைத் தாக்கியதாக மாரீஸ்வரனுக்கும், சதீஸ்வரனுக்கும் மன உளைச்சல் ஏற்பட, சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று ‘அட்மிட்’ ஆனார்கள். இந்த விவகாரம், துலுக்கபட்டி கிராமத்தினரை வேகப்படுத்த, அடித்தவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிவகாசி - விளாம்பட்டி பிரதான சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். உடனே, காவல்துறையினர் குவிக்கப்பட்டு கிராமத்தினரைக் கலைந்துபோகும்படி எச்சரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் ஓடிவர, தடுக்க முற்பட்ட பெண் காவலர் தடுமாறி கீழே விழுந்தார். ஹேர்பின் குத்தியதால் ரத்தம் கசிந்து முகத்தில் வழிய, ‘பெண் காவலர் மண்டை உடைந்தது’ என்று அந்த இடம் பரபரப்பானது. ‘அய்யோ! போலீஸ் விவகாரமாகிவிட்டதே!’ என்று அதிர்ச்சியடைந்த கூட்டத்தினரை, காவல்துறையால் கலைக்க முடிந்தது.

 

துலுக்கப்பட்டி கிராமத்தினர் தரப்பில் “ரெண்டு பேரும் வேலைக்குப் போன பசங்க. இவங்க டூ வீலர்ல சாதி அடையாளம் தெரியற மாதிரி இன்டிகேட்டர் லைட் செட் பண்ணிருந்தாங்க. இது வேண்டுராயபுரத்துல உள்ளவங்களுக்குப் பொறுக்கல. ஏற்கனவே ஆடு, கோழி திருடுபோன கோபத்துல இருந்தவங்க, ஊரைக் காவல் காக்கணும்னு ரவுண்ட்ஸ் வந்திருக்காங்க. அப்பத்தான் அவங்க கண்ணுல எங்க பசங்க சிக்கி அடி வாங்கிருக்காங்க.” என்றனர்.

viruthunagar district, village peoples youngster incident police

 

மல்லி காவல் நிலையத்தில், பட்டியலின இளைஞர்களை அடித்ததாக, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வேண்டுராயபுரம் கிராமத்தினர் 6 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. சாலை மறியல் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய துலுக்கபட்டி கிராமத்தினரும் வழக்கைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.