Skip to main content

சாதிச் சான்றிதழ் கோரி தர்ணாவில் ஈடுபட்ட மாணவரைத் தாக்கிய காவல்துறை ஆய்வாளர் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

caste certificate youth and police incident villupuram district collector office

விழுப்புரம் மாவட்டம், கோலியனூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (20 வயது). இவர் விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் தாம் காட்டுநாயக்கன் சாதியைச் சார்ந்தவர் என்றும், அதற்கான சான்றிதழை கல்லூரியில் சமர்ப்பிப்பதற்காக சான்றிதழ் தருமாறும் கேட்டு முறைப்படி ஏற்கனவே விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். 

 

அங்கிருந்த அலுவலர்கள் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதற்காக நேற்று முன்தினம் (30/12/2021) கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த மகேந்திரன் அதிகாரிகளைச் சந்தித்து தனக்கு சாதிச் சான்றிதழை வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், அலுவலர்கள், அவரை காலையிலிருந்து மாலை வரை அலைக்கழித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மகேந்திரன் இரவு 10.00 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தனி நபராக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

caste certificate youth and police incident villupuram district collector office

 

இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் மகேந்திரனை சந்தித்து அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக, வந்த விழுப்புரம் சைபர் க்ரைம் காவல்துறை ஆய்வாளர் கணபதி என்பவர், திடீரென இளைஞர் மகேந்திரனின் சட்டையைப் பிடித்து, அவரைத் தாக்கித் தரதரவென பிடித்து இழுத்துச் சென்றுள்ளார்.

 

இதைக்கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும், இதை பார்த்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சியைப் பார்த்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் வாலிபர் மகேந்திரனைத் தாக்கிய இன்ஸ்பெக்டர் கணபதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.