Skip to main content

கிட்டாத சாதி சான்றிதழ்... மறுக்கப்படும் கல்வி... பரிதவிப்பில் மாணவர்கள்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

''பிச்சை புகினும் கற்கை நன்றே'' என எப்படிபட்ட வறுமை நிலையிலும் கல்வியைக் கற்றுக்கொள் என்பது ஆன்றோர் சொல். ஆனால் சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் அந்த மாணவ, மாணவியர்களுக்கு தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் அவர்களுக்கான கல்வி மறுக்கப்படும் கொடுமையும் அரங்கேறி உள்ளதுஅந்த கிராமத்தில். 

 

Caste Certificate... Denial of Education...

 

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதியில் மூன்று தலைமுறையாக சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்து காட்டு நாயக்கர் சமூகமக்கள் அடிப்படையில் கூலி, மற்றும் கொத்தடிமை வேலையிலிருப்பவர்கள். இந்த சமூக மக்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் திருத்தப்பட்ட 1975ன் வரிசை எண் 9ன் உத்தரவுப்படி இவர்கள் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள். இவர்களின் 20க்கும் மேற்பட்ட பிள்ளைகள் அங்குள்ள, தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள். இவர்களுக்கான முறையான சாதிச் சான்றிதழ்கள் அரசுத்தரப்பில் வழங்கப்படாததால் இந்த மாணவர்கள் கல்விக்கான அரசு உபகாரத் தொகையைக் கூடப் பெறமுடியாமல் தவிக்கும் நிலையில், மேற்படி பள்ளிகள் சாதிச்சான்று அவசியம் என்று இவர்களிடம் கெடுபிடிகள் காட்டுகிறதாம்.

 

education

 

குறிப்பாக சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால், தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த முத்தார், ராஜேஸ்வரி இரண்டு மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்டுள்ளனர். தங்களுக்கும் இந்த நிலை வருமோ என்கிற அச்சத்திலிருக்கிறார்கள் மற்ற மாணவிகள்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பிறபகுதியில் வசிக்கிற இச்சமூக மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் கொடுத்திருக்கிறது நெல்லை மாவட்ட நிர்வாகம். ஆனால் அதன் அதிகாரத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி சப்கலெக்டரிடம் பலமுறை நாங்கள் விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை  கொடுத்த அரசு நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பிற்குத் தேவையான சாதி சான்றிதழ்களைத் தரவில்லை. இதனால் படித்த மாணவர்கள் வேலைக்குக் கூடப் போக முடியாமல் கிடைத்த வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

 

education

 

வாக்களிக்கும் உரிமை பெற்ற நாங்கள் சாதிச்சான்று இல்லாத காரணத்தால் கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்க முடியாது. சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் எங்களின் ஆதார், ரேசன், ஓட்டர் ஐ.டி. கார்டுகள் ஆகியவைகளை திரும்ப ஒப்படைக்கும் அடுத்தகட்ட நிகழ்வுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்கிறார் அந்தப் பகுதியின் சமூக நல ஆர்வலரான டேனியல்.

உயர் கல்வி கற்றாலும் சாதி அத்தாட்சி தான், மாணவர்களின் வாழ்க்கையையும், தலைவிதியையும் தீர்மானிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.