Skip to main content

பண பங்கீட்டுத் தகராறில் சித்தியை கொலை செய்த தனயன்...!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

இறந்த அப்பாவின் பணிக்கொடை பணத்தை, ஆளுக்கு இவ்வளவு என..? பங்கு போடுவதில், சித்திக்கும் தனயனுக்கும் நடந்த தகராறில் மரக்கட்டையினால் சித்தியை தனயன் அடித்துக் கொன்றுள்ளார்.

 

 Cash dispute issue



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 9வது தெருவைச் சேர்ந்தவர் கோகிலா. இவருடைய அக்கா மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, தனது அக்காவின் கணவரும், நியாய விலைக்கடை ஊழியருமான பாண்டிக்கு மனைவியானார். அதன்பிறகு கோகிலா, தனது மகன் மகேந்திரனுடன், சகோதரி மகேஷ்வரிக்கு பிறந்த கவிதா என்ற பெண் மற்றும் மணிகண்டன் என்ற ஆண் ஆகிய இருகுழந்தைகளையும் சேர்த்து பார்த்துக்கொண்டுவந்துள்ளார்.

பின்னர் கவிதா திருமணமாகி வெளியூர் செல்ல, மணிகண்டனோ தவறான சகவாசத்தால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அடிதடிகளில் ஈடுப்பட்டு அடிக்கடி சிறை சென்று வந்திருக்கின்றார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பாண்டியும் இறந்துவிட, மணிகண்டனின் நிலை முற்றிலும் மாறியுள்ளது.

இது இப்படியிருக்க, பாண்டி இறப்பினால் பணிக்கொடையாக ரூ.2 லட்சம் அரசிடமிருந்து சமீபத்தில் வந்திருக்கின்றது. அதேவேளையில், கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் சிறை சென்று இருந்த மணிகண்டன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த பணிக்கொடை பணம் மணிகண்டனுக்கு தெரியவர, அதில் பங்கு கேட்டு சித்தி கோகிலாவிடம் தினசரி சண்டையிட்டிருக்கின்றார்.

எனினும் கோகிலா பணத்தை தரவில்லை. இவ்வேளையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோகிலாவின் மகன் மகேந்திரன் தனது பள்ளி சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிய வேளையில், தனது தாயார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை அறிந்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் பணம் பங்கீட்டு பிரச்சனை தெரியவர மணிகண்டனை பிடித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், " பணம் பங்கீடு தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை எழுந்ததாகவும், கோபத்தில் அருகிலிருந்த மரச்சேரை உடைத்து மரக்கட்டைகளைக் கொண்டு கோகிலாவை அடித்துக் கொன்றதாக மணிகண்டன் ஒப்புக்கொண்டுள்ளார்". சித்தியை உடன் பிறந்த சகோதிரி மகனே கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நகைகள் கொள்ளை; திருச்சி போலீசார் அதிரடி

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

trichy city commissioner press meet for jewellery workshop incident 

 

திருச்சியில் நேற்று ஜோசப் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற நான்கு மணி நேரத்தில் நகை கொள்ளை அடித்த பரணிக்குமார் (வயது 22), சரவணன் (வயது 22) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு தொடர்பாக இன்று கோட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா, "கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் ஏற்கனவே 18 வழக்குகளில் தொடர்புடையவர்கள் மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படையினர் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நான்கு மணி நேரத்தில் இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுவதையும் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நபர்களிடம் ஒப்படைக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

திருச்சி மாநகரை பொறுத்தவரை இந்த வருடத்தில் மட்டும் கொலை வழிப்பறி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் என மொத்தம் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. திருச்சி மாநகரில் தொடர்ந்து கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறினார். இந்த பேட்டியின் போது மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

 

 

Next Story

வங்கி பணத்துடன் தலைமறைவான ஊழியர்; வெளியான பரபரப்பு ஆடியோ

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

villupuram chinthamani village bank cashier mukesh call recording 

 

விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட  வங்கி ஒன்று செயல்படுகிறது இந்த வங்கியில் அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வியாபாரிகள் வரவு செலவுக்கணக்கு வைத்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் வங்கி கடன் உதவியும் செய்து வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வரும் பிரியதர்ஷினி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேராக சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

அந்த புகாரில் வளவனூரைச் சேர்ந்த முகேஷ் என்பவர் வங்கியில் காசாளராக வேலை செய்து வருவதாகவும் அவர் நேற்று காலை 10 மணி அளவில் வங்கிக்கு பணி செய்வதற்காக வந்தவர் சுமார் அரை மணி நேரம் கழித்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொண்டு திரும்பி வருவதாக மேலாளரிடம் அனுமதி கேட்டு சென்றுள்ளார்.  நீண்ட நேரம் ஆகியும் முகேஷ் வங்கிக்கு திரும்பி வரவில்லை சந்தேகம் அடைந்த மேலாளர் பிரியதர்ஷினி மருத்துவமனைக்குச் சென்று கேசியர் முகேஷை தேடி உள்ளார். அப்போது அவர் அங்கு இல்லை.

 

இதையடுத்து வங்கிப் பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக மற்றொருவரை கேசியரை நியமித்து பணியை பார்க்கச் சொல்லியுள்ளார். அப்போது கணினியில் வங்கி பணம் இருப்பு தொகை 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்  இருந்துள்ளது. அந்த ரொக்க பணம் முழுவதும் காணவில்லை என்பது தெரியவந்தது உடனடியாக காசியர் அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை கேசியர் முகேஷ் எடுத்துக் கொண்டு சென்றது தெரிய வந்தது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய்யான காரணத்தை கூறி விட்டு வங்கிப் பணத்தை அள்ளிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார் முகேஷ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கேசியரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து வங்கி பணத்தை பெற்று செய்து தருமாறு மேலாளர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

 

இதையடுத்து மேலாளரின் புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த வங்கிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக போலீசார் பணத்துடன் தலைமறைவான கேஷியர் முகேஷை கண்டுபிடிக்க விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் முகேஷ் செல்போனை போலீசார் டிரேஸ் செய்தனர். அதில் அவர் செல்போன் சென்னை பகுதியில் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. இதையடுத்து அவர் ஒரு செல்போனில் இருந்து தனது சகோதரிக்கு ஆடியோவில் பேசிய அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

 

அந்த ஆடியோவில் பேசிய முகேஷ் தனது கணக்கில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை தனது சகோதரிக்கு செல்போன் மூலம் அனுப்பி உள்ளதாகவும் மேலும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வருமாறு ஒரு கும்பல் தன்னை பல நாட்களாக மிரட்டி வந்தது. இதனால் வேறு வழி இல்லாமல் வங்கியின் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்னையை நோக்கி சென்று கூட்டேரிப்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பஸ்ஸில் தன்னை சிலர் அழைத்துச் செல்வதாகவும் தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், தற்போது என்னை எங்கே கொண்டு சென்று வைத்திருக்கிறார்கள் என்று எனக்கே தெரியவில்லை என ஆடியோவில் பேசி அனுப்பி உள்ளார் முகேஷ். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முகேஷ் பணத்தை எடுத்துக் கொண்டு தன்னை யாரோ கடத்திக் கொண்டு போவதாக நடிக்கிறாரா அல்லது உண்மையிலேயே மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்று இருக்கிறார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.