Skip to main content

சிலை கடத்தல் வழக்கில் கோவில் எழுத்தர் கைது!! அதிர்ச்சியில் மனைவி விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை!!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

சிலை கடத்தல் வழக்கில்  சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த  தலைமை எழுத்தர் ராஜாவின் வீட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறையினர் சீல் வைத்தனர். அதனை கண்டித்து ராஜாவின் மனைவி விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

poison

 

 

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோட்டை மற்றும் அகழியுடன் கூடிய பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. ஆயிறம்ஆண்டுகள் பழமையான அந்த கோயிலில் சுற்றியுள்ள 73 கிராம கோயில்களிலிருந்து பழமையான, ஐம்பொன் சிலைகள், வெங்கலசிலைகள் ஆபரனங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பிற்காக பசுபதிஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்து வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் கடந்த 2013 ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினர் சிலைகளை கணக்குஎடுத்தனர். பாதுகாப்பாக இருந்த சிலைகளில் கீழமணக்குடி விஸ்வநாதசுவாமி கோயிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி- தெய்வாணை, சந்திரசேகரஅம்மன் சிலைகளும், ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்தம் 6 சிலைகள் காணாமல் போயிருந்தது.

 

6 சிலைகள் மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையராக இருந்த த.கஜேந்திரன், முன்னாள் செயல் அலுவலர்கள் கு.காமராஜ், ராமச்சந்திரன், கோயில் தலைமை எழுத்தர் ராஜா உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கடந்தாண்டு நவம்பர் மாதம் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.  பின்னர் ஜாமீனில் அனைவரும் வெளியே வந்துள்ளனர்.

 

poison

 

சிலை கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்றவர்கள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருக்க கூடாது என பொதுநல வழக்கு போடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோயில் அருகே இருக்கும் ராஜாவின் வீட்டுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். 

இந்நிலையில் இன்று 5ம் தேதி மதியம் கும்பகோணம் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, திருவிடைமருதூர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் கோட்டை தெருவில் குடியிருக்கும் ராஜாவின் வீட்டுக்கு சென்றனர்.

 

 

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் இடத்தில் குடியிருக்கும் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் சீல் வைக்கப்படும் என உதவி ஆணையர் தெரிவித்தார். அதற்கு ராஜா காலஅவகாசம் கேட்டுள்ளார். அதற்கு அறநிலையத்துறையினர் மறுத்து உடனடியாக வீட்டுக்கு சீல் வைத்தனர்.

இதனால் வீட்டுக்கு வெளியே வந்த ராஜா, அவரது மனைவி சரண்யா (எ ) அபினேஸ்வரி பாட்டி சந்திரா  ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அபினேஸ்வரியும், சந்திராவும் வீட்டின் தோட்டத்தில் வைத்திருந்த வாழைமரங்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லியை குடித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக சேர்த்தனர்.

 

​​

 

 

 

இதுகுறித்து ராஜா கூறுகையில், " பந்தநல்லூர் கோயில் கோட்டையைச் சுற்றி ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். நாங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு குடியிருந்து வருகிறோம்.நான் சிலை கடத்தல் வழக்கில் கைதாகினேன். இந்த வழக்கு வரும் 11 ம் தேதி கும்பகோணத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் நான் அறநிலையத்துறை அதிகாரிகளை காட்டி கொடுத்துவிடுவேன் என பயந்து போய் என்னுடைய வீட்டுக்கு மட்டும்  அறநிலையத்துறையினர் சீல் வைத்துள்ளனர். வீட்டை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டும் கொடுக்கவில்லை. எங்களுடைய அனைத்து பொருட்களும் வீட்டில் உள்ளே உள்ளது. தற்போது நான், பாட்டி, மனைவி, மகன், மகளை வைத்துக்கொண்டு நடுத்தெருவில் நிற்கிறேன்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மூளையில் ரத்தக்கசிவு; மருத்துவமனையில் ஜக்கி வாசுதேவ் - கவலையில் ஈஷா யோகா மையம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Jaggi Vasudev undergoes surgery at Apollo Hospital due to bleeding in corner

கோவையில் ஈஷா யோகா மைய அறக்கட்டளையை நிறுவி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சீடர்களைக் கொண்டுள்ளவர் ஜக்கி வாசுதேவ். ஈஷாவை தொடங்கிய நாள் தொட்டு இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளில் ஜக்கி வாசுதேவும் அவரது ஈஷா மையமும் சிக்கி வருகிறது. காடுகளை அழித்து ஈஷா மையம் கட்டப்பட்டதாகவும், இளம் பெண்களை மூளைச் சலவை செய்து ஊதியமே இல்லாமல் பணியில் சேர்த்திருப்பதாகவும், ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக வந்த குடும்பப் பெண் சுபஸ்ரீ என்பவர் மர்மமான முறையில் இறந்ததாகவும் சர்ச்சைகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது. அதேபோல, ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி, பிரதமர், தொழில் துறை, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வது வழக்கம். இந்த அளவுக்கு அதிகார வர்க்கங்களுடன் நெருங்கிய உறவை வளர்த்து வருகிறார் ஜக்கி.

இந்நிலையில் பத்திரிகையாளர் ஆனந்த் நரசிம்மன் ட்விட்டரில் ஜக்கியின்  உடல்நிலை குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். ஈஷா ஜக்கி வாசுதேவ், கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தலைவலி காரணமாக ஜக்கியின் டாக்டர் வினித் சூரியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் ஜக்கியின் மூளையில் இரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஈஷா மையத்தின் சார்பில் கூறுகையில், சாமியார் வாசுதேவ் கடந்த நான்கு வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். வலி தீவிரமாக இருந்தபோதிலும், அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார். மேலும், கடந்த மார்ச் 8 அன்று இரவு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். மார்ச் 14 ஆம் தேதி மதியம் அவர் டெல்லிக்கு வந்தபோது, தலைவலி மிகவும் கடுமையாகியுள்ளது. இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணரான டாக்டர் வினித் சூரியின் ஆலோசனையின் பேரில், ஜக்கி வாசுதேவுக்கு அதே நாளில் மாலை 4:30 மணிக்கு அவசர MRI பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம், சாமியார் மூளையில் பெரிய ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 3-4 வாரங்களில் நீடித்த இரத்தக்கசிவு இருந்ததும் பரிசோதனையில்  தெரியவந்தது.

இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மார்ச் 17 அன்று, ஜக்கி வாசுதேவின் நரம்பியல் நிலையும், இடது காலின் பலவீனமும் சேர்ந்து உடலை மோசமாக பாதித்தது. மீண்டும் மீண்டும் வாந்தியுடன் தலைவலி ஏற்பட, உடல்நிலை மோசமடைந்தது. இறுதியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்ட அவர், மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கை போக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜக்கி வென்டிலேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  இதையடுத்து, சாமியார் ஜக்கியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. மற்றும் அவரது மூளை மற்றும் உடல் இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளன என ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜக்கி சிவராத்திரி விழா அன்று நடனமாடியதால் வயது மூப்பின் காரணமாக வந்த விளைவுதான் இது என்கின்றனர் அவரது சீடர்கள் சிலர்.

இதற்கிடையில், மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபடி ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசுகையில், மருத்துவர்கள் என்னுடைய தலைப் பகுதியை ஆபரேஷன் செய்தார்கள். ஆனாலும், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் தையல் போட்டுவிட்டனர் என்றார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது. இதனால், நடிகர் எஸ்.வி. சேகர் உட்பட பிரபலங்களும், ஈஷா பக்தர்களும் ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.