ADVERTISEMENT

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை கோரி வழக்கு! 

06:27 PM Sep 29, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்குத் தடை விதிக்க கோரிய மனுவுக்குப் பதில் அளிக்க, படத் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோரின் நடிப்பில் ஜி.எம். பிலிம் கார்பரேசன் தயாரிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளி வரவுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், அவர்களைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி, படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனச் சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் சென்னை 15வது உதவி உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், சிறுபான்மை கிறிஸ்தவர்களைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும், இது இரு மதத்தினர் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதுவரை படத்தைத் திரையரங்கு மற்றும் ஓ.டி.டி. உள்ளிட்ட இணையதளத்தில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த 15வது உதவி உரிமையில் நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஏ.பிரவின்குமார் ஆஜரானர் மனு தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் நாளைக்குப் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT