Advertisment

வேட்புமனுவில் தவறான தகவல்; எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு 

Case registered against Edappadi Palaniswami

Advertisment

தேர்தல்வேட்புமனுவில்தவறானதகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதுவழக்குப் பதியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, தனது வேட்புமனுவின் பிரமாணபத்திரத்தில் சொத்து மதிப்பைத் தவறாகத்தெரிவித்துள்ளதாகத்தேனிமாவட்டத்தைச்சேர்ந்தமிலானிஎன்றவாக்காளர்ஒருவர் சேலம் தனிநபர் நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தனிநபர் நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்று கூறியதோடு, மே 26 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும்உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்குவந்தபோது, சேலம் மத்திய குற்றப்பிரிவுபோலீசார்தரப்பிலிருந்துதனிநபர் நீதிமன்றத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவுசெய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசாரின் விளக்கத்தைப்பதில்மனுவாகத்தக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe