Skip to main content

வேட்புமனுவில் தவறான தகவல்; எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு 

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Case registered against Edappadi Palaniswami

 

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

 

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, தனது வேட்புமனுவின் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பைத் தவறாகத் தெரிவித்துள்ளதாகத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்ற வாக்காளர் ஒருவர் சேலம் தனிநபர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தனிநபர் நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என்று கூறியதோடு, மே 26 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. 

 

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பிலிருந்து தனிநபர் நீதிமன்றத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசாரின் விளக்கத்தைப் பதில் மனுவாகத் தக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து  உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்