Skip to main content

பா.ஜ.க. நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு; மதத்தை இழிவாகப் பேசியதாகவும் புகார்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

Case register on BJP Puthukottai member

 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய அமைச்சர் ஒருவரின் பினாமியாக தன்னைக் காட்டிக் கொண்டு எல்.இ.டி. பல்பு, கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு என பல புகார்களில் சிக்கிய ஏ.டி. பஞ்சாயத்து கிளர்க் கடுக்காக்காடு முருகானந்தம் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேல் சோதனைகள் செய்தனர்.

 

இதையடுத்து தன்னையும் தன் சொத்துகளையும் பாதுகாத்துக் கொள்ள பா.ஜ.க. கருப்பு முருகானந்தம் மூலமாக அவர் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்த சில வாரங்களிலேயே புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. பொருளாளர் பதவியும் பெற்றுக்கொண்டார். இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புகார் வழக்காகப் பதிவாகி உள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கரம்பக்காடு இனாம் கிராமத்தைச் சேர்ந்தவர் இப்ராஹீம் மகன் சாகுல் ஹமீது (49). இவர், கடந்த மாதம் திருச்சி சரக டி.ஐ.ஜி.யிடம் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், புதுக்கோட்டை சார்லஸ் நகரில் வசிக்கும் வீரய்யா மகன் முருகானந்தம் தொழில் செய்வதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு என்னிடம் ரூ. 60 லட்சத்தை 2 தவணையாகப் பெற்றார். அதன் பிறகு பணத்தை திருப்பித் தரவில்லை. பல முறை கேட்டும் பணம் தரவில்லை. 

 

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி எனது செல்போனுக்கு அழைத்துப் பேசிய முருகானந்தம், பணத்தை திருப்பித் தர முடியாது என்று சொன்னதுடன், என்னையும் என் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாகப் பேசி கொலை மிரட்டல் செய்தார். மேலும், என்னை மதரீதியாகவும் இழிவாகப் பேசினார் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

 

அந்தப் புகார் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்துள்ள நிலையில், முருகானந்தம் மீது ஐ.பி.சி. 406, 420, 507 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் உதவி ஆய்வாளர் குமரவேல் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதே போல திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம் உறவினரான கறம்பக்குடி களந்திரான்பட்டு மணல் கரிகாலன் கொடுத்த புகாரின் பேரில் முருகானந்தம் மீது புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.