Skip to main content

இணையதள வசதிகள் இருந்தால் போதும் வழக்குகளின் முழு விவரங்களை அறியலாம்!

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை ஒருங்கிணைத்துள்ளது மத்திய சட்டத்துறை அமைச்சகம். இதன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றமும் ஒருங்கிணைக்கப்பட்டு இதற்காக ஒரு புதிய இணையதளம் மற்றும் மொபைல் செயலியை மத்திய சட்ட அமைச்சகம் வெளியீட்டுள்ளது. இந்த இணையதள முகவரி: ecourts.gov.in மற்றும்  e-Courts Services மொபைல்  செயலியை (Mobile Application)  24×7 பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் , தாலுகாவில் உள்ள நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் (e - District Courts , High Courts, Taluk Courts) இணைக்கப்பட்டுள்ளது என்பது பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

online status court

இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வழக்குகளின் விவரங்கள் மற்றும் எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வருகிறது தொடர்பான விவரங்கள் பெற முடியும். மேலும் வழக்குகள் முடிக்கப்பட்டுவிட்டால் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி மக்கள் எளிதாக தீர்ப்பின் நகலை பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பாமர மக்களுக்கு இந்த இணையதள வசதியின் மூலம் நேரம் சேமிக்க முடியும் மற்றும் அலைச்சல் குறையும். எந்த நேரமும் இந்த இணையதளத்திற்கு சென்று வழக்குகளின் விவரங்களை அறிய முடியும் என்பது இந்த இணையதளத்தின் மற்றொரு சிறப்பம்சங்கள் ஆகும். FIR NUMBER மற்றும் District Name , Date of case filling , வழக்கறிஞரின் பெயர்கள் , CNR NUMBER , Registration Number போன்றவை குறிப்பிட்டால் வழக்கு தொடர்ந்தவர்கள் பெயர்கள் மற்றும் கேவியட் மனு செய்தவர்களின் விவரங்களை எளிதில் அறியலாம். மக்களிடம் "Android Mobile" மற்றும் "Internet" இருந்தால் நிமிடத்தில் வழக்குகளின் தகவல்களை அறியலாம். மேலும் இந்த மொபைல் செயலியில் "GPS" option -ம் உள்ளது. "Google Maps" உதவியுடன் நீதிமன்றம் எந்த பகுதியில் உள்ள என்பது தொடர்பான முழு விவரங்கள் "e-Courts Services" செயலியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீதிமன்றம் தொடர்பான அனைத்து விளக்கங்கள் மற்றும் ஆவணங்களை எளிதாக பெறலாம். அனைத்து வழக்குக்களும் நீதித்துறை இணையதள சேவையில் பதிந்துள்ளது என்பது  ஜனநாயகத்தையும்  , இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலும் உயிர் ஊட்டுவதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் மிக விரைவாக தீர்ப்புகள் வழங்குவதற்கும் இந்த இணையதளம் உதவியாக இருக்கும். இதன் மூலம் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. இந்திய இளைஞர்கள் இந்த செயலியின் உள்ள விளக்கத்தை கிராமம் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மக்கள் அனைவருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.


பி . சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.