Skip to main content

போயஸ் இல்ல இழப்பீட்டுத் தொகையில் வருமான வரி பாக்கியை வழங்கக் கோரிய வழக்கு! – தீபக், தீபா மற்றும் தனி அதிகாரி பதிலளிக்க உத்தரவு!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Case for Income Tax Arrears on Boise Garden  Compensation! - Deepak, Deepa and private officer ordered to respond!

 

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கான இழப்பீட்டுத் தொகையில், தங்களது பாக்கியை வழங்கக் கோரி, வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவுக்கு, நவம்பர் 5 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தீபா, தீபக் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தனி அதிகாரிக்கு, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள 'வேதா நிலையம் இல்லம்' நினைவு இல்லமாக்கப்படும் என்று அரசு அறிவித்தது.


வேதாநிலையம் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 


வேதா நிலையம் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட தென் சென்னை வருவாய்க் கோட்டாட்சியர் லஷ்மி, நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி என்ற முறையில் 24 ஆயிரத்து 322 பரப்பு கொண்ட வேதா நிலையம் இல்லத்துக்கு,  68 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து உத்தரவிட்டார்.


அதன்படி, இந்தத் தொகை, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தல் அதிகாரியின் இழப்பீட்டு உத்தரவை மனுவாக, செப்டம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிட்டி சிவில் நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையைப் பெறுவது குறித்து, செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க, தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

 

Ad

 

இதையடுத்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி 36 கோடியே 87 லட்சம் ரூபாயை வழங்கும்படி, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மனுத் தாக்கல் (மெமோ) செய்துள்ளது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை மனு குறித்து தீபா, தீபக் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி ஆகியோர், நவம்பர் 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்க, சென்னை ஆறாவது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

சசிகலாவால் எனது உயிருக்கு ஆபத்து; ஜெ.தீபா பரபரப்பு புகார்

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

J.Deepa complaint my life is in danger by sasikala

 

சென்னை போயஸ் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அருகே உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்து வருபவர் ஹரிஹரன். இவர் சுதந்திர தினத்தன்று வழக்கம் போல் கோவிலில் பூஜை செய்ய வந்த போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சாமி கும்பிட அங்கு வந்திருந்தார். அப்போது இருவருக்குமிடையே பூஜை செய்வது சம்பந்தமாக  பிரச்சனை ஏற்பட்டது.

 

இதனால், தீபாவும், அவருடைய கணவன் மாதவனும் தன்னை பூஜை செய்யவிடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தீபா மீது ஹரிஹரன் புகார் அளித்தார். மேலும், அவர் விநாயகர் சிலையின் வெள்ளிக் கீரிடத்தை தீபா பறிக்க முயன்றதாக புகார் அளித்தார். இதனையடுத்து, அவர் பூஜை செய்வதற்கான செலவையும், அதற்கான மாத ஊதியத்தையும் சசிகலா கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில், தீபாவும், அவரது கணவரும் பூசாரி ஹரிஹரன் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரில், “ பூசாரி ஹரிஹரன் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களின் தூண்டுதலின் பெயரில் புகார் அளித்துள்ளார்.  நான் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசு என்பதால் அவர் சார்பாக அனைத்து கடமைகளும் செய்யும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது. விநாயகர் சிலையின் வெள்ளி கீரிடத்தை நாங்கள் பறிக்க முயன்றதாக ஹரிஹரன் புகாரில் கூறியிருப்பது போல் எதுவும்  நடக்கவில்லை. இனிமேல், போயஸ் தோட்டத்தில் உள்ள விநாயகர் சிலையை  நாங்கள் பராமரித்து பூஜை செய்து கொள்கிறோம்.

 

இதுபோல் என் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வரும் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களால் என் உயிருக்கும், உடமைக்கு ஆபத்து உள்ளது. சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எனது பாட்டி வீடான வேதா இல்லத்திலோ அல்லது எங்கள் மற்ற பூர்வீக சொத்துகளிலோ உரிமை கொண்டாட எங்களால் அனுமதிக்க முடியாது. சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக நான் கருதுகிறேன். அதனால்,  எனக்கும், எனது கணவருக்கும், குழந்தைக்கும், மற்றும் எனது குடும்பத்திற்கும் உரிய  பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.