Skip to main content

ஆர்.எஸ்.பாரதி மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
rs

 

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

கோவை பேரூரில் கடந்த 26 ம் தேதி  நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் பேரூர் போலீசில் புகார் அளித்தார்.  இதையத்து ஆர்.எஸ்.பாரதி,  திமுக எம்.எல்.ஏ. கார்த்திக், திமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 “இ.பி.எஸ். மீது சட்ட நடவடிக்கை..” - ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
“Legal action on E.P.S. ..” - R.S. Bharti

கடலூரில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்போது தமிழகத்தில் போதைப் பொருட்கள் உள்ளதாக போராட்டம் செய்கிறார். திமுகவின் நிதிநிலை அறிக்கையை தமிழகத்தில் அனைத்து மக்களும் வரவேற்றுள்ளனர். இந்திய அளவில் பாராட்டுகின்றனர். இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. 

அதிமுக ஆட்சியின் போது, குஜராத் மாநிலத்தில் அதானி துறைமுகத்தில் 3,300 கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை கண்டித்தெல்லாம் அவர் போராட்டம் நடத்தவில்லை. போதைப் பொருளை இந்தியா முழுவதும் சப்ளை செய்வது பாஜகவினர்தான். அதிமுக ஆட்சியில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஆணையர் ஜார்ஜ், அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர், ரமணா உள்ளிட்டவர்கள் மீது குட்கா வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது. இவர்கள் மீது அப்போது கட்சி ரீதியாக எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஒருவர் செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்த்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் எந்த குற்றத்தையும் சொல்ல முடியாத நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்போது போதைப் பொருள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்கு தான் அதிக அளவில் போதைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்துகிறார். இது ஐடி துறையில் உள்ளவர்கள் அனைவரையும் அசிங்கப்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்திலிருந்து தான் உலகம் முழுவதும் ஐடி துறையில் அதிகமானோர் பணியாற்றி வருகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தேர்தலின்போது 570 கோடி ரூபாய் கண்டெய்னரில் பறிமுதல் செய்யப்பட்டு சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திமுக தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் கூட்டணியை பிளவுபடுத்த அனைத்து வேலைகளையும் அதிமுகவினர் செய்து வருகின்றனர். இது 2019ல் கூடிய கூட்டணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டிற்கு மோடி முனிசிபாலிட்டி எலக்சனுக்கு வருவது போல் வந்து செல்கிறார். அவருக்கு சூடு சொரணை இருந்தால் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதை கூற வேண்டும். அப்பொழுதுதான் அவர் ஒரு அரசியல்வாதி. என்.எல்.சி., அணு உலை குறித்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதற்கு திமுக நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.

Next Story

அண்ணாமலை பயணம்; தி.மு.க.வினருக்கு ஆர்.எஸ். பாரதி அறிவுரை

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

Annamalai Trip; RS Bharati advises DMK

 

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் அமைச்சருமான தா.மோ. அன்பரசன் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டலக்குழுத் தலைவர் மற்றும் வடக்குப் பகுதி தி.மு.க செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

அதைத் தொடர்ந்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஆர்.எஸ். பாரதி, “மூன்று மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க படுதோல்வி அடைந்ததால் வருகிற டிசம்பர் மாதத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

 

தி.மு.க. தலைவரும் நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்குத் தயாராக இருக்கிறார். அதே போல் நாங்களும் தயாராக இருக்கிறோம். அண்ணாமலை நடைப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் நமது முகவர்கள் பின் தொடர்ந்து சென்று பொதுமக்களிடம் தி.மு.க செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.