Skip to main content

மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு: காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு!

Published on 08/08/2018 | Edited on 08/08/2018
sgf


திமுக தலைவர் கலைஞரின் உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 6 மணிக்கு பதில்மனு தாக்கல் செய்ய முடியுமா என தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். வழக்கில் என்ன சட்ட சிக்கல் உள்ளது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என திமுக வழக்கறிஞர்கள் வாதாடினர். உணர்வுப்பூர்வமான வழக்கு என்பதால் காலை 8 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஒத்திவைத்தனர்.

காலை 8 மணிக்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ததும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்