Skip to main content

வாத்து மேய்த்த சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை... 11 பேர் மீது வழக்கு! 6 பேர் கைது!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

Case filed 11 persons who  5 girls  were slaves to graze ducks! 6 arrested!

 

புதுச்சேரி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கன்னியப்பன்(55). இவர் வாத்துப் பண்ணை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த, (6 வயது முதல் 14 வயது உள்ள) ஐந்து சிறுமிகளை, அழைத்து வந்து, தங்க இடம் கொடுத்து, கடந்த 2 வருடங்களாக வாத்து மேய்ப்பதற்குப் பயன்படுத்தி வந்துள்ளார்.
 

இந்நிலையில், இவர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக வந்த புகாரையடுத்து புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவினர், கடந்த 23-ஆம் தேதி சோதனையிட்டபோது, அங்கு 5 சிறுமிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் நலக் குழுவினர் 2 குழந்தைகளை மீட்டனர். பிறகு தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேலும் 3 குழந்தைகளையும் மீட்டுள்ளனர். 


அவர்களை மீட்டு புதுச்சேரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். அவர்களை விசாரணை செய்ததிலிருந்து, வாத்து வளர்ப்புப் பண்ணையில், சுமார் 7 வயது முதல் 13 வயது வரையுள்ள 5 சிறுமிகளை, வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக வைத்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்தச் சிறுமிகளின் பெற்றோர்களிடம் ஒரு சிறுமிக்கு ரூபாய் 3,000 வீதம் கொடுத்து, இவர்களது வேலைக்காகப்  பயன்படுத்தி வந்துள்ளதும், விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து வாத்துப் பண்ணை உரிமையாளர்கள் மீது சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டது, பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை செய்தல் மற்றும் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக் குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
 

இதனிடையே, காவல் துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்த நிலையில், மீட்கப்பட்ட சிறுமிகள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. அதனையடுத்து  கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள், கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை குழந்தைகள் நலக் குழு உறுதிசெய்தது. 

 

cnc


ஆரம்பத்தில் இது தொடர்பாக, சிறுமிகள் ஏதும் தெரிவிக்கவில்லை. தொண்டு நிறுவனத்தினர் மூலம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி தந்தனர். அப்போது, அவர்களிடம் விசாரித்தபோது, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்து தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளில் 13 வயதுடைய சிறுமி கருவுற்று இருக்கிறார். மேலும், மற்ற சிறுமிகளின் நிலை மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகுதான் தெரியவரும். இந்த குற்றச் சம்பவத்தில், 10 நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளை வாத்து மேய்க்கும் பண்ணையில் தங்க வைத்து, தொடர்ந்து அவர்களை அடிமைகளாக நடத்தி, இதுபோன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நேற்று முன்தினம் (08.11.2020) வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 
 

சிறுமிகள் வேலை செய்யும் இடத்தில் உரிமையாளர் அவரது மகன், உறவினர்கள் மற்றும் அங்கே வேலை பார்த்து வரும் நபர்கள் எனச் சுமார் 10 நபர்கள், தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அந்தச் சிறுமிகளோ இவையனைத்தும் என்ன என்று தெரியாமலேயே அங்கு இருந்துள்ளனர். மேலும், இந்தச் சிறுமிகளின் வளர்ப்பு தந்தை அய்யனாரும் பாலியல் வல்லுறவு செய்துள்ளார். அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார். இதுவரை இந்த குற்ற வழக்கில், 6 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 நபர்களை தேடி வருகின்றனர். மேலும், சிறுமிகளை மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வரும் பட்சத்தில் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 
 

nkn

 

சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாக பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் ராஜ்குமார், பசுபதி, சிவா, அய்யனார், மூர்த்தி ஆகியோர் மீது, 'மோசமான பாலியல் தாக்குதலில் ஈடுபட்டது', 'பாலியல் துன்புறுத்தல்', 'சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பது', 'குழந்தைகளை சித்திரவதை செய்தது', 'போக்சோ' உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இருவர் 18 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக இருக்கும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 "மக்கள் அலட்சியப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" - முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்! 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

"People should be vaccinated without neglect" - Chief Minister Rangasamy's request!

 

புதுச்சேரி சுகாதாரத்துறையில் 136 தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி வழங்கியதையடுத்து ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், சமுதாய நல மையங்கள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிவதற்காக 136 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான ஆணைகளை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.  இதனிடையே, "மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்"  என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

 
இதுதொடர்பாக ரங்கசாமி வெளியிட்டுள்ள வீடியோ செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: "கரானா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தாங்களாகவே தங்களைப் பாதுகாத்துக் கொண்டால் ஒழிய மரணத்திலிருந்து தப்பிப்பது மிகவும் சிரமமாகும் என  மருத்துவர்கள் கூறுகின்றனர்.  


நிச்சயமாக ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதில் எந்தவித அச்சமும் இல்லை என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். கட்டாயமாக ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால்  கரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். தேவையான தடுப்பு ஊசிகள் சுகாதாரத்துறை இடம் இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் அலட்சியப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அந்த வீடியோவில் கூறியுள்ளார். 

 

Next Story

நியமன எம்.எல்.ஏ. விவகாரம்..! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு..

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

Nominated MLA  Adjournment of judgment without specifying a date.

 

புதுச்சேரிக்கான சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும்,  பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. கடந்த 07ஆம் தேதி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று, அதன் பிறகு ஊருக்குத் திரும்பிய நிலையில், தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அமைச்சரவை பதவி ஏற்கவும் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.

 

இதனிடையே பாஜகவைச் சேர்ந்த கே. வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், ஆர்.பி. அசோக்பாபு ஆகிய 3 பேரை மத்திய அரசு நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டது. அமைச்சரவை, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பொறுப்பேற்காத நிலையில் மத்திய அரசு வெளியிட்ட இந்த உத்தரவால் புதுச்சேரியில் குழப்பம் நிலவிவருகிறது. 

 

இந்த நிலையில், இந்த நியமன உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்தும், நியமன எம்.எல்.ஏக்கள் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், கிராமப்புற மக்கள் வாழ்வாதார இயக்கத்தின் தலைவருமான கோ.அ. ஜெகந்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று (20.05.2021) விசாரணைக்குவந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனனும், "அரசு பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளது. எனவே மூன்று பேர் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை" என வாதிட்டனர். மேலும், நியமன எம்.எல்.ஏக்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள்,  "அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்கக்கூடாது" என வாதிட்டனர்.

 

அதற்கு மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஞானசேகரன்,  "சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்காத நிலையில், நியமன உறுப்பினர்கள் நியமித்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என வாதிட்டார்.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.