Skip to main content

கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற அரசு ஆணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு!- கோரிக்கைகளை முன்வைக்கும் தனியார் பள்ளிகள் சங்கம்!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
Case for cancellatiCase for cancellation of government order not to impose education bill - Private Schools Associationon of government order not to impose education bill - Private Schools Association

 

 

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசு ஆணையினை ரத்து செய்ய வேண்டுமென,  அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கே பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  தமிழக அரசிடம் பதில் மனு தாக்கல் செய்யச் சொன்னது. அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், வழக்கில் ஆஜராகி,  வாதத்தை எடுத்து வைத்தார்.  மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர், தங்களது வாதத்தை முன்வைத்தனர்.  இருதரப்பையும் விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரிடம் கோரிக்கை மனுவைப் பெற்று,  நன்கு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும்,  வரும் 8-ஆம் தேதி, வழக்கை விசாரிப்பதாகவும் தெரிவித்தது.  அதனடிப்படையில்,  அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில்,  தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் பின்வருமாறு,

“கடந்த 2019- 20 கல்வி ஆண்டில், மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டண பாக்கியை வசூலித்துக் கொள்வதற்கு எவ்வித தடையும் விதிக்கக்கூடாது. 2020 -21 ஆம் ஆண்டு கல்விக் கட்டணத்தை, மூன்று தவணைகளில் வசூலித்துக் கொள்ள உத்தரவிட வேண்டும். மேலும், இரண்டு கல்வி ஆண்டுகளாக, கல்லூரிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் நிலுவைத் தொகையை, உடனடியாக வழங்க வேண்டும். மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு RTE மூலமாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை,  2018 -19 கல்வி ஆண்டுகளில் 40% வழங்கப்படாமல் உள்ளதையும்,  கடந்த கல்வி ஆண்டு முழுமையாக வழங்கப்படாமல் உள்ளதையும், உடனடியாக வழங்க வேண்டும்.  இக்கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நிறைவு பெற்றவுடன், கால தாமதப்படுத்தாமல் ஸ்காலர்ஷிப் கட்டணம் மற்றும் RTE கட்டணங்களை தாமதமில்லாமல் வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.