Advertisment

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு... 5 ஆசிரியைகள் தப்பி ஓட்டம்!

case against Sivasankar Baba ... 5 teachers escape!

Advertisment

முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கைப் போக்சோ பிரிவுக்கு மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டது. அந்தவிசாரணையில், ஆபாசமாகப் பேச பயன்படுத்திய பள்ளியின் மெயில் ஐடி, பென் ட்ரைவ், சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகதகவல்கள் வெளியாகின.

police

புழல் சிறையில் உள்ள அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இரண்டாவதுபோக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, கடந்த 13ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சிவசங்கர் பாபாவைவரும் 27ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சுசில்ஹரி பள்ளியின் ஆசிரியைகள்5 பேரைவரும் திங்கட்கிழமை அழைத்துவிசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்ப திட்டமிட்டிருந்தனர். அதேபோல் அந்தப் பள்ளி ஊழியர்களிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்நிலையில்இன்றுவிசாரணைக்கு சம்மன் கொடுக்கச் சென்ற நிலையில் காயத்திரி, பிரவீனா உள்ளிட்டஆசிரியைகள்5 பேரும் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேளம்பாக்கம், பழனி கார்டனில் உள்ள 5 ஆசிரியைகளின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. தப்பி ஓடிய ஆசிரியைகளைசி.பி.சி.ஐ.டி போலீசார் தேடிவருகின்றனர். மேலும், சுசில் ஹரி பள்ளிக்குட்பட்டகுடியிருப்பு வளாகத்தில் பள்ளிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தங்கியிருப்பதும்தெரியவந்துள்ளது.

CBCID INVESTIGATION police sexual harassment Sivasankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe