Skip to main content

பெண் வி.ஏ.ஓ.விடம் தவறாக நடந்தவர் மீது வழக்கு! -விருதுநகர் மாவட்ட வில்லங்கம்!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

A case against the person who misbehaved with the woman VAO! -Virudunagar District Villangam!

 

சீனியம்மாள், விருதுநகர் மாவட்டம் - குண்டாயிருப்பில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிகிறார். இவரை, பட்டா வழங்குவதில் கையூட்டு பெற்று முறைகேடாகச் செயல்பட, ஆறுமுகக்கனி என்பவர் வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால், சீனியம்மாளுக்கு ஆறுமுகக்கனிக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் எழுவதுண்டு.  இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி காலை 11 மணியளவில், வி.ஏ.ஓ. அலுவலகத்தில் சீனியம்மாள் மீது உரசியபடி பாய்ந்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார் ஆறுமுகக்கனி.

 

அப்போது ஆறுமுகக்கனி “நான் சொல்வதை செய்வதற்காகத்தான் அரசாங்கம் உனக்கு சம்பளம் கொடுக்கிறது. நான் சொல்லுறத நீ கேட்க வேண்டும்.” என்று அடவாடியாக நடந்திருக்கிறார். உடனே வி.ஏ.ஓ. சீனியம்மாள் சத்தம்போட, பொதுமக்கள் அங்கு வந்துவிட்டனர். ஆனாலும் ஆறுமுகக்கனி, “நான் சொல்லுறத கேட்கலைன்னா உன்னை என்ன செய்யுறேன் பாரு..” என்று மிரட்டிவிட்டே சென்றிருக்கிறார்.

 

தான் பணியில் இருந்தபோது பணி செய்ய விடாமல் தடுத்து களங்கப்படுத்தும் எண்ணத்தில் மோசமான செயல்களில் ஈடுபட்ட ஆறுமுகக்கனி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சீனியம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் காவல் நிலையம் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது.  

A case against the person who misbehaved with the woman VAO! -Virudunagar District Villangam!

 

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்  சீனியம்மாளைத் தொடர்புகொண்டோம்.  “நான் கணவரை இழந்தவள். என்னால இங்கே நிம்மதியா வேலை பார்க்க முடியல. இங்கே இருக்கிற தலையாரி குடிகாரரா இருக்கிறாரு. அவரால எனக்கு பிரச்சனைக்கு மேல பிரச்சனை. என்னை எல்லாருகிட்டயும் தவறா சித்தரிக்கிறாரு. சங்கத்துல அவரு பொறுப்புல வேற இருக்காரு. அந்த தலையாரி தூண்டிவிட்டுத்தான் ஆறுமுகக்கனி என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு. இதை நான் ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னேன். அப்படியெல்லாம் புகார் எழுதக்கூடாதுன்னு, ஆறுமுகக்கனி மேல மட்டும் புகார் எழுதித்தரச் சொன்னாங்க. காரணம், சாதிக்காரன் என்பதால் அந்த தலையாரிக்கு போலீஸ் சப்போர்ட் பண்ணுது. அந்த தலையாரி குறித்து நான் மாவட்ட கலெக்டரிடமும் புகார் பண்ணிருக்கேன்.” என்றார் பரிதாபமாக.

 

நாம் ஆலங்குளம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராமசாமியிடம் பேசினோம். “அந்தம்மா மேலயும் புகார் இருக்கு. வேலைக்கு சரியான நேரத்துக்கு வர்றதில்லைன்னு. யார் மேலயாச்சும் பழி சுமத்துறதே அவங்களுக்கு வேலையா போச்சு.” என்று சலித்துக் கொண்டார்.

 

பெண்கள் அரசு அலுவலராக இருந்தாலும், பாதுகாப்பில்லை என்பது வேதனைக்குரியது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது