ADVERTISEMENT
ADVERTISEMENT
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கூமாபட்டியில் ஸ்ரீஅருள்மிகு சப்பாணி முத்தையா, ஸ்ரீஆறுமுகபெருமாள் கோவில் மாசி திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் நடைபெறும் மாபெரும் அன்னதான நிகழ்ச்சிக்கு தன்னை தொடர்பு கொள்ளுமாறு ஜே.எம்.கோஸ் என்பவர் ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.
அரசு அனுமதி இல்லாமலும், பொது இடத்தில் அழகைக் குலைக்கும் வகையிலும் பேனர் வைத்திருந்ததாக ஜே.எம்.கோஸ் மீது கூமாபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ஆறுமுகசாமி அளித்துள்ள புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Show comments